வித்தியாசமான சொகுசு ஹோட்டல்கள் !

விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்ல திட்டமிடுவோம். சிலர் நம் நாட்டிற்குள் எங்கு செல்லலாம் என்றும், கொஞ்சம் வசதியுள்ளவர்கள் வெளி நாட்டிற்கு செல்லவும் திட்ட மிடுவார்கள்.
அப்படி வெளி நாட்டுச் சுற்றுலா செல்லும் போது தங்கு வதற்கு சிறந்த ஹோட்டல்கள் எது என்று தேர்ந்தெடுத்து தங்குவோம். சிலர் வித்தியசமான ஹோட்டலை விரும்புவார்கள்.

உதாரணமாக மலை பிரதேசத்தில், கடல் ஓரத்தில் உள்ள ஹோட்டல்களை விரும்பி தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் சில ஹோட்டல் களுக்கு சென்று தங்குவதே ஒரு சுற்றுலா அனுப வமாக இருக்கும். 

இதற்கென்றே சுற்றுலா செல்பவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அப்படி வித்தியசமான அனுபவத்தை வழங்கும் சில சொகுசு ஹோட்டல்கள்...

அமென்கிரி
அமெரிக்காவில் யுடா மாகாணத்தில் கேன்யான் பாயிண்ட் என்ற இடத்தில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. அமெரிக்கா வின் தேசிய நினைவு சின்னமான கிராண்ட் படிகட்டு அமைப்புக்கு அருகில் அமைந்துள்ளது.

அமென் என்றால் அமைதி என்று அர்த்தம். இந்த ஹோட்டலை அமைதியின் இடம் என்றே அழைக்கிறார்கள். 1988-ம் ஆண்டு 40 அறைகள் மற்றும் 30 தனியான வீடுகள் போன்ற வற்றை கொண்டு ஆரம்பிக்க ப்பட்டது.

ஒரு நாளைக்கு இரண்டு நபர்கள் தங்கு வதற்கு ரூ.1,01,798.

ஐஸ் ஹோட்டல்
ஸ்வீடன் நாட்டில் ஜுக்காஸ் ஜர்வி கிராமத்தில் 1990-ம் ஆண்டு 10,000 டன் எடை கொண்ட ஐஸ் கட்டியால் உருவாக்கப் பட்டுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் பனி கட்டியாக மாறும் பொழுது ஹோட் டலை புதுப் பித்துக் கொள் கிறார்கள்.

மேலும் வெவ்வேறு வகையில் புதுப் புது மாடல்களில் அறைகளை வடிவமைக் கிறார்கள். இந்த ஹோட்டலில் 65 அறைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு 2 நபர்கள் தங்குவதற்கு ரூ.14,522.

மேஜிக் மெளண்டைன்

சிலி நாட்டில் 60,000 ஹெக்டர் பரப்பளவில் உள்ள காட்டில் ஹூயுல்லோ ஹூயுல்லோ என்ற இடத்தில் இந்த விடுதி அமைந்துள்ளது.

இந்த விடுதி முழுக்க முழுக்க மரங்கள், கொடிகள், இலைகளால் சூழ்ந்து ஒரு வனத்தோட்ட வடிவில் இருக்குமாறு அமைக்கப் பட்டுள்ளது.

இந்த விடுதியின் மற்றொரு அறை நீர்வீழ்ச்சி வருவது போல் அமைக்கப் பட்டுள்ளது. முழுவதும் வனத்தில் இருந்தாலும் இண்டர்நெட் உட்பட அனைத்து வசதிகளும் கிடை க்கிறது.

ஹோட்டலு க்கு அருகே நீர்வீழ்ச்சி, விலங்குகள் சரணா லயம் என இயற்கை சார்ந்த இடத்தை விரும்பு வோருக்கு சிறந்த இடம். ஒரு நாளைக்கு 2 நபர்கள் தங்கு வதற்கு ரூ.19,364.

பிவக்கோ ஜெர்வஸ்தி
இத்தாலி நாட்டில் மெளன் பிளாங் என்ற மலையில் இந்த ஹோட்டல் அமைந் துள்ளது. கடல் மட்டத் திலிருந்து 2,835 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. 

இந்த ஹோ ட்டலை சுற்றிலும் பனியாறு இருப்பதால் கோடை காலத்தில் அதிக பயணிகள் வருகின்றனர். ஹெலி காப்டர் மூலமே இந்த ஹோட்டலுக்கு செல்ல முடியும். 

மின்சார வசதி, சமையல் வசதி, கம்ப் யூட்டர் என அனைத்து வசதிகளும் இந்த ஹோட்ட லில் இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு நபர்கள் தங்குவதற்கு ரூ.1,00,132

தி மாண்டா ரிசார்ட்

தான் சானியா நாட்டில் பெம்பா தீவிற்கு நடுவில் அமைந்திருக்கும் ஐந்து நட்சத்திர விடுதி. இந்த ஹோட்டலின் அறைகள் நீருக்குள்ளேயே இருக்கின்றன. 

அறைகள் முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப் பட்டிருப்பதால் கடல் வாழ் உயிரினங்களை பார்க்க முடிகிறது. 
பவள பாறைகள் அதிகமான இடம் என்பதால் நீருக்குள் செல்லும் பொழுது மிக ரம்மிய மான காட்சியைத் தருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு நபர்கள் தங்கு வதற்கு ரூ.1,00,132.
Tags:
Privacy and cookie settings