ஆன்லைனில் நடத்தும் பாடம் புரியாததால் மாணவர் தற்கொலை !

0

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரட்டு பட்டியில்    வசித்து வருபவர்கள் இளங்கோவன், ஜோதி  இவர்களின் மகன் விக்ரபாண்டி (16) . இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார்.  

ஆன்லைனில்  நடத்தும்  பாடம்
அனைத்து பள்ளியிலும் நடத்துவது போல் இவருடைய பள்ளியிலும் ஆன்லைனில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் விக்ரபாண்டி ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.  

இதனால் விக்கிரபாண்டியின் தந்தை இவரை கண்டித்துள்ளார்.  மேலும் இணைய வழி பாடங்கள் இவருக்கு புரியாத காரணத்தினாலும் மன உளைச்சலில் இருந்தார் விக்கிரபாண்டி.  

சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது

இந்த சமயத்தில் வீட்டில் தனிமையில் இருந்த போது  தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)