ஜோதிகாவுக்கு எதிர்ப்பு - கோயில்களுக்கு ஏன் செலவு செய்றீங்க?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது விழா ஒன்றில் பங்கேற்றார் நடிகை ஜோதிகா. அந்த விருது நிகழ்ச்சி அண்மையில் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. 
கோயில்களுக்கு ஏன் செலவு செய்றீங்க?

அதில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. ஒரு முறை ஷுட்டிங்குக்காக சென்ற போது அழகாக இருக்கும், கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.

வாயால் சொல்ல முடியாது நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி உள்ளது. அப்போது எனக்கு ஷுட்டிங் அங்குள்ள ஹாஸ்பிட்டலில் இருந்தது. 
ஹாஸ்பிட்டலுக்கு சென்றபோது அது சரியாக பராமரிக்கப் படாமல் இருந்ததை பார்த்தேன். நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது.

பள்ளிகள் முக்கியம் கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். 

தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனை களுக்குக் கொடுங்கள். 
ஜோதிகாவுக்கு எதிர்ப்பு

இது மிகவும் முக்கியம். இதை நான் ராட்சசி படத்திலும் சொல்லி யிருக்கிறேன். இயக்குநர் கௌதம் ராஜும் சொல்லி யிருக்கிறார்.

பராமரிக்க பணம் கொடுங்கள் ஹாஸ்பிட்டலை பார்த்தப் பிறகு நான் கோவிலுக்குள் போகவில்லை. 

பள்ளிகளும் மருத்துவ மனைகளும் தான் முக்கியம். கோவில்களுக்கு செலவு செய்வது உண்டியலில் காசு போடுவதைவிட பள்ளிகள் மருத்துவ மனைகளை பராமரிக்க பணம் கொடுங்கள் என்று கூறியிருந்தார் ஜோதிகா.
விளாசும் நெட்டிசன்ஸ் ஜோதிகாவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

ஜோதிகாவின் பேச்சின் வீடியோவை வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரையும் விளாசி வருகின்றனர்.

ஒரு கோடியில் கார் எதற்கு? ஜோதிகாவின் பேச்சை பார்த்த இந்த நெட்டிசன், 5 கோடியில் வீடு எதற்கு,,,? 
ஒரு கோடியில் கார் எதற்கு

ஒரு கோடியில் கார் எதற்கு,,,,? 300 கோடிக்கு சொத்து எதற்கு,,? ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை தான் என கடுமையாக சாடியிருக்கிறார்

விருது விழா தேவையா? இவ்வளவு செலவு செய்து கோயிலுக்கு பெயிண்ட் அடிக்கணுமா? என்று கேள்வி கேட்க தெரிந்த ஜோதிகாவுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து இந்த விழா தேவையா என்று கேட்க தெரியவில்லை. 
விழா ஏற்பாட்டாளர்கள் செலவு செய்த தொகையை பள்ளிகளுக்கும் மருத்துவமனை களுக்கும் கொடுக்க சொல்லி இருக்கலாமே? என்று தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.
Tags: