இந்தோனிஷிய மருத்துவரின் மனிதநேய மரணம் !

கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளித்து, இறுதியில் தனது மரணம் வெகு அருகில் இருக்கிறது என்பதை உணர்ந்து...
இந்தோனிஷிய மருத்துவரின் மனிதநேய மரணம் !


தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும் தொலைவில் நின்று இறுதியாக சந்தித்த இந்தோனிஷிய (Dr Hadio Ali) டாக்டர் ஹாதியோ அலியின் புகைப்படத்தை அவரது கர்ப்பிணியான மனைவி கலங்கிய கண்களுடனும் கணத்த இதயத்துடன் படம் பிடித்துள்ளார்..!

ஒரு அந்நிய நபரைப் போன்று தூரத்தில் நின்று விடைபெறும் டாக்டர் தனது இறுதி சந்திப்பு சூழலிலும் குடும்பத்தினரை அருகில் வர அனுமதிக்க வில்லை..
மருத்துவராய் இருந்தாலும் ஒரு மனிதனாய் தந்தையாய் கணவனாய் அவரின் மனநிலையை எவரும் வார்த்தையால் வடித்து விட முடியாது!

தனது கணவராக இருந்தும் தனது பிள்ளைகளின் பாதுகாவலராய் இருந்தும் வெளியே நின்று இருதியாக பேசி சென்ற தனது கணவர் இனி இந்த வீட்டிற்கு வரப்போவது இல்லை 

இது தான் இருதி தருணம் என்பதை உணர்ந்து உயிருடன் கணவரை அனுப்பி விட்டு உடலை பார்க்க கூட முடியாத அந்த மரண நிலையையும் அந்த மனைவியின் உல்லக் குமுரலையும் எவரும் வார்த்தையால் வடித்து விட முடியாது..!


இந்த புகைப்படம் கூறும் கண்ணீர் செய்திகள் ஏராளம்..! ஏராளம்..!
கொரோனா பாதித்த பலருக்கு சிகிச்சை யளித்து இந்தோனேஷியா விற்கு மட்டுமின்றி உலகுக்கே மனிதநேய மான்பாளராக திகழும் டாக்டர் ஹாதியோ அலி மார்ச் 22 அன்று தனது மரணத்தை தழுவினார்...
Tags: