யாரெல்லாம் உடற்பயிற்சி செய்யவே கூடாது? தெரியுமா?

0
உடற்பயிற்சி செய்வது என்பது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் நம்முடைய உடல் சக்தியை மீறி செய்கின்ற எந்த உடற்பயிற்சி யும் எப்படி பலனளிக்கும் என்பது சொல்ல முடியாது. 
யாரெல்லாம் உடற்பயிற்சி செய்ய கூடாது?

அதனால் கீழே குறிப்பிடும் உடல்நிலையில் இருக்கும் சிலர் எந்த விதமான உடற்பயிற்சி யும் செய்யாமல் இருப்பது தான் நல்லது.

உடற்பயிற்சி

உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம் அதற்கு உடற்பயிற்சி ஒரு அவசியமான ஒன்று. நம்மில் பெரும் பாலானவர்கள் கணினி வேலைகள் அல்லது பெரும் உடலுழைப்பு அற்ற வேலை களைச் செய்து வருகிறோம். 
உடற்பயிற்சி

அப்படி உள்ளவர்கள் தினமும் உடல் ரீதியான பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமான ஒன்று. குறிப்பாக பனிக்காலமான டிசம்பர் மாதத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். 

ஏன் என்றால் குளிர் அதிகமாக இருக்கும் பொழுது நமது உடலில் வியர்வை என்பது பெரிதாக வெளியேற வாய்ப்புகள் குறைவு. காலையில் இருக்கும் குளிர்ந்த நேரத்தில் உடல் சுறுசுறுப்பாக இயங்க வாய்ப்புகள் குறைவு.

​ஏன் செய்யக்கூடாது?

எனவே அன்று நாள் முழுவதும் நாம் செய்யும் வேலையிலும் மந்தமாகவே செயல் படுவோம். மேலும் குளிர் அதிகம் இருப்பதால் ஜீரணிப்பு தன்மை குறைவாகவே இருக்கும். 
ஏன் செய்யக்கூடாது?

ஆனால் வழக்கமான உணவை நாம் உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே குளிர் காலங்களில் போர்வை எவ்வளவு முக்கியமோ அதே போன்று உடல் பயிற்சியும் மிகவும் முக்கியம். 

அதே நேரத்தில் எதையும் அளவுக்கு அதிகமாகச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் பல உடல் உபாதை களைச் சந்திக்க நேரிடும். 

ஒரு சில காரணங் களால் நமக்கு உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகலாம் எந்த காரணங்களால் உடற்பயிற்சி செய்யக் கூடாது என்பதை தற்போது பார்க்கலாம்.

​காய்ச்சல்

குளிர் காலத்தில் காய்ச்சல் முதலில் அனைவருக்கும் அல்லது பெரும் பாலானவர்களு க்கு வரும். காய்ச்சல் இருக்கும் நாட்களில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 
காய்ச்சல்

காய்ச்சல் போன்ற நோய் இருக்கும் பொழுது உடல் ஏற்கனவே சோர்வாகக் காணப்படும். நாம் உடற்பயிற்சி செய்யும் போது மேலும் சோர்வு அதிகரிக்கும். 

எனவே காய்ச்சல் போன்ற நோய்கள் இருக்கும் பொழுது உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று உடற்பயிற்சி யில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் சரியானதும் செய்யலாம்.

​காயம்

உடலில் ஏதாவது அடிபட்டு காயங்கள் இருந்தால், உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்வது தவிர்க்க வேண்டும் உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று உடற்பயிற்சி செய்யும் பொழுது பெரும்பாலான உடல் உறுப்புகள் இயங்கும். 

அந்த சமயத்தில் நாம் காயம் இன்னும் பெரிதாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே காயங்கள் சரியானதும் உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று பயிற்சி தொடரலாம். 
காயம்
அல்லது அருகில் இருக்கும் உங்களது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பின்பு உடற்பயிற்சி தொடரலாம். பெரிய காயங்கள் ஏதும் இருந்தால் அது சரியாகக் காலங்கள் தேவைப்படும். 

அந்த நேரங்களில் யோகா, மெடிடேஷன் போன்ற விஷயங்களில் ஈடுபடலாம். ஒருசீல எளிமையான யோகாசனங்கள் வீட்டிலேயே செய்ய முடியும். அதைச் செய்து உடற்பயிற்சி தொடரலாம்.

​உடல் உபாதைகள்

வேறு ஏதாவது காயங்களோ அல்லது உள்காயங்கள் ஏதாவது இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். 
உடல் உபாதைகள்

உள்காயங்கள் இருக்கும் பொழுது உடற்பயிற்சி செய்தால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

அது மேலும் தசைகளுக்கு அதிக இறுக்கத்தையும் தரும் உள் காயங்கள் இருக்கும் பொழுது நம் தசைகளுக்கு அசைவுகள் அதிகம் இருக்கக் கூடாது அது போன்ற நேரங்களில் உடற்பயிற்சி செய்வது பல பிரச்சனை களைக் கொண்டு வந்து சேர்க்கும்.

​ஏற்கனவே சுறுசுறுப்பாக இருந்தால்

கணினியில் வேலை செய்வது அல்லது உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடலாம். 

ஏற்கனவே நமது வாழ்க்கைமுறை உடலுக்கு அதிகம் வேலை தருவது போல் இருந்தால், உடற்பயிற்சி செய்யத் தேவை யில்லை. 
ஏற்கனவே சுறுசுறுப்பாக இருந்தால்
மரத்தான் போன்ற ஓட்டப் பந்தய பயிற்சியில் ஈடுபடுபவர்கள், ட்ரெக்கிங் செய்பவர்கள், நடன ஆசிரியர்கள், யோகா ஆசிரியர்கள், நடனம் அதிகம் ஆடுபவர்கள், 

இது போன்ற வேலைகளில் தினமும் ஈடுபடுபவர் களுக்கு உடற்பயிற்சி அவ்வளவாகத் தேவைப்படாது இது போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் பாடிபில்டிங் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.

​அறுவை சிகிச்சை

உடலில் ஏதாவது அறுவை சிகிச்சை நடந்து இருந்தால், மருத்துவரின் அறிவுரை இல்லாமல் உடற்பயிற்சி நிலையத்திற்குக் கண்டிப்பாக நாம் செல்லக் கூடாது. 

மருத்துவரை ஆலோசித்து விட்டு உடலில் நல்ல முன்னேற்றம் கிடைத்த பிறகே உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று உடற் பயிற்சியைத் தொடர வேண்டும். 
அறுவை சிகிச்சை

வீட்டிலிருந்தே சில சாதாரண உடற்பயிற்சி களில் ஈடுபடலாம். ஆனால் அதற்கு முன்னர் உங்கள் மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம். 

அறுவை சிகிச்சை நடந்த பின்பு சிறிது காலம் நம் உடல் பழைய நிலைக்குத் திரும்பக் கால அவகாசம் கொடுக்க வேண்டும். 

உடல் பழைய நிலைக்குத் திரும்பிய பின்னரே உடற்பயிற்சி களில் ஈடுபடலாம். எந்த ஒரு உடற்பயிற்சியாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவு செய்வதே நல்லது. 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது போல அதிக அளவில் உடற்பயிற்சி செய்வதால் நமது தசைகள் சேதமடையும் வாய்ப்புகள் உள்ளது. 

எனவே தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்து உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)