பேருந்து ஓட்டும் போது வாட்ஸ் அப் - வீடியோ எடுத்த பயணிகள் !

0
பழனியில் செல்போனை பார்த்தபடி தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்து ஓட்டிய வீடியோ, சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது.
பேருந்து ஓட்டும் போது வாட்ஸ் அப்


பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறை செல்லக் கூடிய தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ராமகிருஷ்ணன், செல்போனை பார்த்த படி பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
ஓட்டுநரின் அலட்சியமான செயல்களால் அச்சம் அடைந்த பயணிகள் ஓட்டுநரை கண்டித்துள்ளனர். 

பயணிகள் கண்டித்தும் கண்டு கொள்ளாத ஓட்டுநர் ராம கிருஷ்ணன் கையில் ஆண்ட்ராய்ட் செல்போனை வைத்துக் கொண்டு போஸ்புக், வாட்ஸ்ஆப் பார்த்தபடி பேருந்தை தொடர்ந்து ஓட்டி யுள்ளார்.
இந்நிலையில் ஓட்டுநரின் செயலை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தவீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பயணிகளின் உயிரை பற்றிய கவலை யில்லாமல் பேருந்தை அஜாக்கரதை யாக இயக்கிய ஓட்டுநர் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)