உயிருடன் எலிகளை சாஸில் தோய்த்து சாப்பிடும் சீன இளைஞர் !

சீனாவில் கொரோனா வைரஸ் உயிரை குடித்து வரும் நிலையில் சீன இளைஞர் ஒருவர் உயிருடன் எலிகளை பிடித்து சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
எலிகளை சாப்பிடும் சீன இளைஞர்


சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் வவ்வாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. 

இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் அவர்களுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.

இது வரை இந்த வைரஸ் பாதிப்பால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். 1500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீன அரசு அதிகாரப் பூர்வமாக வெளியிட்டது. 

சீனாவில் கொரோனா வைரஸால் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளதாக பெண் செவிலியர் ஒருவர் பரபரப்பு வீடியோ வெளி யிட்டுள்ளார்.
தான் சீனாவில் உள்ள ஷகாண் மாகாணத்தில் ஒரு மருத்துவ மனையில் பணியாற்றுவ தாக அந்த செவிலியர் தெரிவித்துள்ளார். அவர் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி யுள்ளார்.

சீனாவில் திரி ஸ்ஹூக்ஸ் என்ற உணவு வகை தடை செய்யப் பட்டுள்ளது. சீனாவில் உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டி களை சாஸில் நனைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது.

இந்த உணவு சீனாவில் தடை செய்யப் பட்டுள்ளது. இதனிடையே வாடிக்கையாளர் ஒருவர் உணவு விடுதியில் எலிக் குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் உண்ணும் வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் விலங்குகளால் பரவி வரும் நிலையில் இதுபோல் இந்த இளைஞர் உயிருடன் எலிகளை சாப்பிடுவதை பார்க்கும் போது அச்சத்தை ஏற்படுத்துகிறது. 
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிலர் அய்யோ செத்த எலியையே சாப்பிட முடியாது. ஆனால் இந்த இளைஞர் பச்சையாக எலியை எப்படித் தான் சாப்பிடுகிறாரோ!


Tags: