கோவை மாணவி நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் !

0
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வல்லுறவு க்கு உள்ளாக்கப் பட்டதாகவும், 
கோவை மாணவி கூட்டுப் பாலியல்

அதில் நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட் டுள்ளது.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் பிறந்த நாள் கொண்டாடுவ தற்கு மாலையில் பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். 

இரவு சுமார் 9 மணியளவில் அவர்கள் வீட்டுக்குச் செல்ல தயாரான போது, 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை வழிமறித் துள்ளது.

போலீஸார் என்று கூறிய அவர்கள், ஆண் நண்பரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்த தாகவும், 

பின்னர் மாணவியை ஆண் நண்பர் முன்னிலை யிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததை வீடியோ பதிவாகவும் அவர்கள் எடுத்ததாகக் கூறப்ப டுகிறது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.... 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)