வாய், கை, பாதங்களில் ஏற்படும் புண்ணிற்கு சிகிச்சை !

0
எம்முடைய வீடுகளில் இருக்கும் சிறார்களுக்கு வாயிலும், கைகளிலும், பாதங்களிலும் புண்கள் ஏற்படுவதை கண்டிருக்கிறோம். 
வாய், கை, பாதங்களில் புண்


பருவ காலங்களில் ஏற்படும் இத்தகைய பாதிப்பிற்கு உடனடியாக மருத்துவர் களை சந்தித்து, ஆலோசனை பெற்று, உரிய சிகிச்சை பெற்று குணப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இத்தகைய புண்கள் ஏற்பட என்ன காரணம் என்பதை மருத்துவ ரீதியாக தெரிந்து கொள்ளுங்கள். 

இத்தகைய புண்கள் காக்ஸாகீ வைரஸ் A 6, என்டோ வைரஸ் 71 ஆகிய வைரஸ் கிருமிகளால் ஏற்படக் கூடியது. இது ஒருவகையான தொற்றுநோய். பெரியவர் களுக்கும். குழந்தை களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். 

குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு இத்தகைய புண்கள் வைரஸ்களால் ஏற்படும்.

இது ஒரு வகையான தொற்று நோய் என்பதால், இதன் அறிகுறியாக முதலில் காய்ச்சல் ஏற்படும். அந்தக் காய்ச்சல் அதிகபட்சம் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். 

இதன் போது வாயில் கொப்புளங்களும், நாக்குப் பகுதிகளில் கொப்புளங் களும், கை மற்றும் பாத பகுதிகளில் சிவப்பு வண்ணத்தில் கொப்புளங் களும் ஏற்படும். 

சிலருக்கு வாயில் ஏற்படும் புண்ணால் எச்சில் விழுங்கு வதிலும், தண்ணீரை பருகுவதிலும் சிரமம் ஏற்படும். சிலருக்கு நகக்கண்ணில் வலி ஏற்படக் கூடும்.


இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ், தொற்று நோய் என்பதால், நோய் பாதித்த பிள்ளைகளை பாடசாலை க்கு அனுப்பாமல் இல்லத்திலேயே வைத்திருந்து சிகிச்சை கொடுத்தால்.. ஒரு வாரத்திற்குள் குணமாகி விடும். 

ஆனால் இதனை சிகிச்சை எடுக்காமல் அலட்சியப் படுத்தினால், மூளைக் காய்ச்சல் ஏற்படக்கூடும்,

சிலருக்கு நுரையீரலும், இதயமும் பாதிக்கப்படும். இதன் போது நோயாளிக்கு நீர் வறட்சி ஏற்படக் கூடும். அதனை முற்றாக தவிர்க்க வேண்டும். 

அதே போல் சிலருக்கு கை விரல்களும் மரத்துப் போகக் கூடும். அதனால் அதற்குரிய சிகிச்சை களை மருத்துவரின் ஆலோசனை யின் பேரில் பெற்று அதில் இருந்து முழுமையாக நிவாரணம் பெற வேண்டும். 

உங்களது கைகளையும், பாதங்களையும் நன்றாக கழுவி சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். 

இதற்கான தடுப்பூசி இன்னும் கண்டறிய படவில்லை என்பதால், இத்தகைய அறிகுறிகள் தென்பட்ட வுடன் சிகிச்சை மேற்கொண்டு சிறார்களை பாதுகாக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)