பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த சிறுநீரகம் !

0
பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீரை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த சிறுநீரகம் !
இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்புகளில் கையாளப்பட்டு நோயாளி களிடத்திலும் ஏற்கனவே வெற்றி யடைந்திருந்தா லும் 

மிகவும் நூதனமான உடலுறுப்பான சிறுநீரகத்தில் இப்போது தான் சத்தியப் பட்டுள்ளது.

இயற்கை யான சிறுநீரகத்தை விட இந்த தொழிநுட்ப- சிறுநீர்க் தின் தொழிற்பாடு கொஞ்சம் மெதுவாகத் தான் இருக்கிறது.

ஆனாலும், இப்போது எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உடல் உறுப்பு- மீள்உருவாக்க மருத்துவத் துறையில் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ள தாக நேச்சர் மெடிஸின் என்ற மருத்துவச் சஞ்சிகை கூறுகிறது.

உடலில் இரத்தத்தி லிருந்து கழிவுப் பொருட்களையும் மேலதிக நீரையும் வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்களே செய்கின்றன. அத்துடன், மாற்று-அறுவை சிகிச்சைகளிலும் மிக அதிகளவில் தேவைப் படுகின்ற உடல் உறுப்பும் சிறுநீரகம் தான். 

மாற்று- அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதற்காக பொருத்தமான சிறுநீரகத்துக்காக காத்திருப்போரின் பட்டியலும் நீண்டே காணப்பட்டு கின்றது.
பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த சிறுநீரகம் !
இப்போது நம்பிக்கை யளிக்கத் தொடங்கி யுள்ள இந்தத் தொழில் நுட்பத்தில், பழுதடைந்த சிறுநீரக மொன்றை எடுத்து, 

அதிலுள்ள பழைய செல்களை அகற்றி விட்டு, தேன்-அடை போன்ற அதன் தோற்றத்தி லிருந்து புதிய செல்களை உருவாகச் செய்வது தான் மருத்துவ விஞ்ஞானிகள் நோக்கம்.

இப்படியாக வளர்த்தெடுக் கப்படும் சிறுநீரகங்கள் நோயாளிகளோடு பொருந்திப் போவதுடன், நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்று-அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவும் 

தேவையான அளவில் கிடைக்கும் என்ற அடிப்படை யிலேயே மருத்துவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மஸாச்சூசெட்ஸ் பொது மருத்துவ மனையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முதற்கட்டமாக எலிகளிடத்தில் இந்தப் பரிசோதனையை செய்து பார்த்திருக் கிறார்கள்... BBC . 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)