சுத்தமான காற்றை 300 ரூபாய்க்கு விற்கும் மதுபானக்கூடம் !

0
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், மாசில்லாத காற்றை 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது டெல்லியை சேர்ந்த பார் ஒன்று. டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
காற்றை விற்கும் மதுபானக்கூடம்


அதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்து வருவது மட்டு மல்லாமல் அலர்ஜி

மற்றும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை களால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

காற்று மாசை கட்டுப் படுத்த டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள Oxy Pure என்ற பாரில் சுத்தமான ஆக்ஸிஜனை 15 நிமிடங்கள் சுவாசிக்க 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.


அந்த பாரில், காற்றை சுத்தம் செய்யும் Oxygen Concentrator வைக்கப் பட்டுள்ளது எனவும்

அதனால் அங்கு வருபவர்கள் 80% முதல் 90% வரை சுத்தமான காற்றை சுவாசிக்க லாம் எனவும் Oxy Pure நிர்வாகம் தெரிவித்துள்ளது.

7 விதமான வாசனை களில் கிடைக்கும் இந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும் எனவும்

தோல் பளபளப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி டெல்லி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)