நியூரான் என்றால் என்ன?

0
நரம்பு மண்டலத்தின், அடிப்படையான ஆதார சக்தியாக விளங்குபவை நியூரோன்களாகும். நியூரான்கள் என்பது ஒரு நரம்பு செல்லும், அதன் கிளைகளுமாகும்.
நியூரான் என்றால் என்ன?
நரம்பு செல்கள் எல்லாம் அமைப்பிலும், அளவிலும், வடிவத்திலும் வேறு பட்டவை களாகவே விளங்குகின்றன.

ஒரு நியூரான் மூன்று பாகமாகப் பிரிந்தி ருக்கிறது. 

1. நியூக்கிலியஸ் 

2. ஆக்ஸன் 

3. டென்ட்ரைட்ஸ்

ஆக்ஸான்கள் நீளமான தாகவும், மெல்லிய தாகவும் உள்ள அமைப்பைப் பெற்று, செல்கள் பகுதியிலிருந்து உணர் வுகளைக் கடத்து கின்றன. டென்ரை ட்டுகள் பொதுவாகக் குட்டையா கவும், கிளை விட்டும் இருந்தும், செல்களுக்கு உணர்வுக ளைக் கடத்து கின்றன.

நரம்புத் திசு 

நரம்பு செல்களும் அவற்றின் கிளைகளும் சேர்ந்து கொண்டு, நரம்புத் திசுக்கள் என்ற அமைப்பை உண்டாக்கி விடுகின்றன. 

ஒரு நரம்பு செல்லிருந்து மற் றொரு நரம்பு செல்லுக்கு, இந்த உணர்வுகள் கடத்தப் படுகின்றன. இந்த வேகம் மின்சாரம் செல்கின்ற வேகத்தைக் காட்டிலும், வேகம் குறைவாகவே விளங் குகிறது.

நரம்புத்திசு வழியாகக் கிளர்த்தல் கடத்தப் படுவதுடன், அதன் வேகம் பற்றி விஞ் ஞானிகள் கண்டறிந்தி ருக்கின்றனர். மனிதனில் இந்தக் கிளர்த்தல், நொடிக்கு 90 மீட்டர் வேகம் எனக் கூறுவர்.
நரம்புத் திசுவின் செயல் தன்மையை, கடத்தும் தன்மை என்றும் கூறுவர். உண ர்ச்சிகளைக் கடத்துகின்ற ஆற்றல் நிறைவாக இருக்க வேண்டு மென்றால், முழுமையாக செயல்பட வேண்டும். 

இதன் முழுமை சேதார மடைந்தால், பாதிக்கப்பட்ட நரம்பு, சரியாகப் பணிபுரிய முடியாது. இயக்க நரம்புகள் சேதமடைந்து போனால், இந்த நரம்புகள் இணையப் பெற்றி ருக்கும் தசைகளின் பகுதிகள், சக்தியற்றதாகி விடுகின்றன. 

உணர்வு நரம்புகள் சேதமடைந்து போனால் தோல் பாதிக்கப்படுகிறது. தோலின் தொடு உணர்வும் பாதிக்கப் பட்டு, சுரணை யற்றுப் போகிறது.

குங்குமப் பூவில் உள்ள மூலப் பொருள்கள் மூளை உள்பட உடல் உறுப்பு கள் அனைத்தையும் சுறுசுறுப்பா க்குவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குங்குமப்பூவுக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக் கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சிரிஸ் போவர் தலை மையில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடந்தது.

உடல் உறுப்புகள் குறிப்பாக மூளையின் செயல்பாட்டை குங்குமப்பூ துரிதப் படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குங்குமப் பூவில் உள்ள பொருள்கள் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படை யாமல் பாதுகாப்பதால் மூளை செயல் பாடு அதிகரிப்பதாக கூறு கின்றனர் ஆராய்ச்சி யாளர்கள்.
இதனால் நரம்பு மண்டலமும் வலுவடையும் என்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், மூளை செல்கள் பாதிப்படைவதால் ஏற்படும் நிலை மைலின் எனப் படுகிறது. இந்த நிலையில் நரம்புகளைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போன்ற கவசம் உருவாகும்.

இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் இந்த திரை போன்ற கவசம் உருவாகாமல் தடுக்கிறது.

பாதிக்கப்பட் டவர்களுக்கு குங்குமப்பூ கலந்த மருந்து கொடுக்கும்போது, பாதிப் பில் இருந்து அவர்கள் விடுபட முடிகிறது. மூளை செல்களை குங்குமப்பூ பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத் துக்கும் வலு சேர்க்கிறது என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)