ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளைஞர் !

0
ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத் திற்கும் இடையில் மாட்டி கொள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
ரயிலில் தவறி விழுந்த இளைஞர்




குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து ஆஷ்ரம் எக்ஸ்ப்ரஸ் ரயில் நேற்று மாலை 6:30 மணியளவில் டெல்லி நோக்கி கிளம்பியது. 
அப்போது ரயில் நகர்ந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு வேகமாக ஓடிவந்த இளைஞர், அதில் ஏற முயன்றார். 

ஆனால், படியில் கால் வைக்கும் போது வழுக்கியதில் எதிர் பாராத விதமாக படிக்கட்டுக்கும், ப்ளாட் பாரத்திற்கும் இடையில் சிக்கினார். 

ரயிலுக்கு இடையில் சிக்கி, இளைஞர் இழுத்துச் செல்லப் படுவதை பார்த்த ரயில்வே காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு ரயிலினுள் அந்த இளைஞரை தள்ளினர். 




ரயில்வே காவல் துறையினர் சமயோசிதமாக செயல் பட்டதால் இளைஞர் அதிர்ஷ்ட வசமாக தப்பினார். உடனடியாக நிறுத்தப்பட்ட ரயில் சில நிமிடங்களு க்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது. 
இளைஞர் தவறி விழும் பரபரப்பு காட்சிகளை வெளியிட்டுள்ள இந்திய ரயில்வே துறை, நீங்கள் எவ்வளவு பலசாலி யானவராகவும், ஸ்மார்ட்டான வராகவும் இருந்து கொள்ளுங்கள்; 

ஆனால் ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ முயற்சி செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளது.




Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)