மகள்களைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய் !

0
மஹாராஸ்டிர மாநிலத்தில் தன் 4 பெண் குழந்தை களையும் கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.




மஹாராஸ்டிர மாநிலம் புல்தானா மாவட்டம் மாலேகான் கிராமத்தைச் சேர்ந்தவர் உஜ்வாலா பாபன் தோகே. 35 வயதான இவருக்கு வைஷ்ணவி (9 வயது), துர்கா (7வயது), ஆருஷி (4வயது), பல்லவி (1 வயது) ஆகிய 4 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். 
சில மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் பாபன் தோகே விஷம் கொடுக்கப்பட்டு சந்தேகத்திற் கிடமான முறையில் உயிரிழந்த தாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று மாலை தன் நான்கு மகள்களையும் அழைத்துக் கொண்டு அந்த பெண்மணி வெளியே கிளம்பி யுள்ளார். 

அப்போது அருகிலுள்ள வர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் கேட்ட போது அருகிலுள்ள தங்களது நிலத்திற்கு போவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் 5 பேரும் வீடு திரும்பாததால், அப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். 

இந்நிலையில்., இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் பார்த்த போது 5 பேரும் உயிரிழந்த நிலையில் மிதந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி யடைந்த கிராம மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 




விரைந்து வந்த ஜனேஃபால் பகுதி காவல் துறையினர் 5 பேரின் சடலங்களை யும் மீட்டு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.
இந்த கூட்டு தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், கணவர் உயிரிழந்த விரக்தியிலும், 

கணவர் இல்லாததால் 4 பெண் குழந்தைகளை எப்படி தனியே வளர்க்க முடியும் என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்க லாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings