தலைக்கவசம் அணிந்தால் லட்டு - வித்தியாசமான விழிப்புணர்வு !

0
திருச்செங்கோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்ட காவலர்கள், தலைக்கவசம் அணியாமல் இருகச்கர வானத்தில் வந்த, 10 பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர் களை தடுத்து நிறுத்தினர். 
தலைக்கவசம் அணிந்தால் லட்டு




அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், அணியா விட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்தும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் எடுத்துக் கூறினார். 
அப்போது அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு அவர் லட்டுகளை வழங்கி பாராட்டினார். 

இறுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர் களுக்கும் லட்டுகளை வழங்கிய அவர், அடுத்த முறை வாகனத்தை எடுக்கும் போது தலைக் கவசம் அணிந்து வாகனங்களை இயக்கி வேண்டும் என வலியுறுத்தினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)