அது என்ன கூப்பிடு தூரம் தெரியுமா?

0
அது என்ன கூப்பிடு தூரம்? ’இன்று தான் தெரிந்தது. கூப்பிடு தூரம் அது எவ்வளவு தூரம் என்பதைப் பார்ப்போம். வீரசோழிய உரையில், ‘முழ நான்கு கோல்; அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு’ என்று சொல்லப் பட்டிருக்கிறது.
அது என்ன கூப்பிடு தூரம் தெரியுமா?


முழநான்கு கொண்ட கோல் = 6 அடி நீளமுள்ள கோல்

இந்தக் கோலால் 500 = 500 X 6 = 3000 அடிகள்.

கிட்டத்தட்ட முக்கால் மைலுக்குச் சற்றுக் குறைவான தூரம்.

இன்னொன்று ‘யோசனை’ எனப்படும். இதன் அளவுகள் ஒன்றுடன்

ஒன்று மிகவும் வித்தியாசப்படும்.
பொதுவாக இது நான்கு காதம் கொண்டது.

அப்படியானால்

12000 நீட்டளவு (Yard) X 4 = 48000 நீட்டளவுகள் கொண்டது. கிட்டத்தட்ட 30 மைல் என்று கொள்ளலாம்.

ராமாயணத்தில் எல்லாமே யோசனைக் கணக்கில் தான் இருக்கும்.

நூறு யோசனை நீளம், நூறு யோசனை உயரம், நூறு யோசனை அகலம் என்று இப்படி. நாட்டுக்கு நாடு பல அளவைகள் இருந்திருக்கின்றன.

பொதுவான வழக்கில் இருந்ததைச் சொல்கிறேன். இந்த வாய்ப்பாடு களை யெல்லாம் எங்காவது சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கொள்ளுப் பேரப்பிள்ளை களிடம் நீங்கள் கதை சொல்லும் போது, “இப்படி யெல்லாம் அளந்து விட்டிருக் கிறாங்கப்பா, நம்ப ஆளுங்க”, என்று அளந்து விடலாம்.

8 நெல் = 1 விரக்கடை (0.75 inches)

12 விரக்கடை = 1 சாண் (9 inches)


2 சாண் = 1 முழம் (18 inches)

2 முழம் = 1 கஜம் (3 feet = 36 inches)

4 முழம் = 1 பாகம் ( 6 feet)

6000 பாகம் = 1 காதம்(12000 கஜம்)

1 காதம் என்பது கிட்டத்தட்ட 7 மைல்.

கீலோமீட்டராக்க 7 X 8 / 5 செய்து கொள்ளுங்கள்.

இதனை ‘ஏழரை நாழிகை வழி’ என்றும் சொல்வார்கள்.

ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம்.

ஒரு சராசரி மனிதன் 3 மணி நேரத்தில் பொடி நடையால் கடக்கும் தூரமாக இதைக் கருதினார்கள்.

சரிதானே? மூன்று மணி நேரத்தில் 7 மைல். ஒரு மணிக்கு ஒன்றே முக்கால் மைல்.

மனிதனே மூன்று மணி நேரத்தில் காத தூரம் போகிறான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட குதிரை அப்படியல்ல.

காளமேகப் புலவர் சொல்கிறார் கேளுங்கள்:

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க

பின்னே இருந்திரண்டு பேர்தள்ள – எந்நேரம்

வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம்போம் காத வழி!

விகடராமன் என்பவனுடைய குதிரை ஒரு காதம் செல்வதற்கு
பான் கார்டு பயன்கள் என்ன.?
ஒரு மாதம் பிடிக்குமாம். அதுவும் முன்னாலிருந்து கொண்டு மூன்று பேர் கடிவாளத்தைப் பற்றியிழுக்க, பின்னாலிருந்து கொண்டு இரண்டு பேர் தள்ளினால்தான் அந்த வேகமும் கூட.

சிவகங்கைப் பக்கத்தில் ராசசிங்கமங்கலக் கண்மாய் என்றொரு பேரேரி இருக்கிறது.

ராசசிம்ம பாண்டியன் காலத்தில் கிபி 800 வாக்கில் வெட்டப்பட்டது.

அதற்கு நாற்பத்தெட்டுக் கலிங்குகள் இருந்தனவாம்.


ஒரு காதத்துக்கு ஒரு கலிங்கு வீதம் கட்டி யிருக்கிறார்கள்.

அதையொொட்டி ஒரு பெயர் அந்தக் கண்மாய்க்கு ஏற்பட்டிருக் கிறது.

‘நாரை பறக்காத நாற்பத்தெட்டுக் காதவழி’.

நாரைகள் ஆர்க்டிக் பிரதேசத்தி லிருந்து நவம்பர் டிசம்பர் மாதத்தில் தெற்கு நோக்கி பறந்துவரும். ஆங்கில V எழுத்து அமைப்பில் அவை கூட்டங் கூட்டமாகப் பறந்து வந்து தமிழக நீர் நிலைகளில் நிலை கொள்ளும்.

நாரை அடாது விடாது நீண்ட தூரம் பறக்கக் கூடியது. அப்பேர்ப்பட்ட நாரையும் கூட ராசசிங்க மங்கலத்துக் கண்மாயின் நாற்பத்தெட்டுக் கலிங்கு களையும் ஒரே வீச்சில் பறந்து கடக்க மாட்டாதாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)