நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியை மானபங்கம் செய்த கணவர் !

0
நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் தலையை மொட்டை யடித்து சித்தரவதை செய்த கணவன். இந்த பரந்த உலகை சுற்றி எத்தனையோ விசித்திறமான நிகழ்வுகள் நடக்கின்றன. அவைகளில் சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சில நகைச்சுவையும் தரும். 
நண்பர்கள் முன் மனைவியை மானபங்கம் செய்த கணவர்


இந்நிலையில், தனது நண்பர்கள் முன்னால் நடனம் ஆட மறுத்ததால் மனைவியின் தலையை மொட்டை யடித்து சித்தரவதை செய்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.

இந்த சம்பவம், பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்துள்ளது. பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த பெண் அஸ்மா ஆஸிஸ் -க்கும், மியான் பைசல் -க்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஆஸிஸ் பரபரப்பு வீடியோ ஒன்றை சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் அந்த பெண் மொட்டை யடிக்கப்பட்ட தலையுடனும், களையிழந்த முகத்துடனும் பரிதாபமாக பேசியுள்ளார். அதில், கணவர் மற்றும் அவரது நண்பர்களின் முன்னிலையில் நடனம் ஆட மறுத்ததற் காக தன்னை கணவர் துன்புறுத்திய தாக வீடியோவில் ஆஸிஸ் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் என்னுடைய ஆடைகளை வீட்டு பணியாளர் முன் அகற்றி, அவரைக் கொண்டு என்னை பிடிக்க வைத்து தலை முடியை ஷேவ் செய்து பின்னர் அதை தீயிட்டு கொழுத்திய தாக கணவர் மீது ஆஸிஸ் புகார் தெரிவித் துள்ளார்.


இது குறித்து காவல் துறையில் புகாரளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறியது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை யடுத்து, ஆஸிஸின் கணவர் மற்றும் வீட்டு பணியாளர் கைது செய்யப் பட்டனர். இருப்பினும், அவர் மீதான குற்றச் சாட்டை பைசல் முழுமையாக மறுத்துள்ளார். 

பொய்யான சூழலை உருவாக்கி அதனை பயன்படுத்தி தன்னை சிக்க வைத்துள்ள தாக பைசல் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)