வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் களை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்காளர்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லு மிடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பை பார்க்கும் போது திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப் படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமி அடிக்கடி தனது தேர்தல் பிரச்சார உரையில் தான் ஒரு விவசாயி என்றும் ஒரு விவசாயியின் கஷ்டம் இன்னொரு விவசாயிக்குத் தான் தெரியும் என்றும் கூறி வருகிறார். இந்த நிலையில் முதல்வரின் இந்த பேச்சுக்கு இன்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
கள்ளக் குறிச்சி தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், 'முதல்வர் பழனிச்சாமி உண்மையான விவசாயி என்றால் நானே அவருக்கு ஆதரவு கொடுப்பேன். ஆனால் அவர் விவசாயி அல்ல, விஷவாயு என்று கூறினார். மேலும் ஏரி, குளம், கினறு, தென்னை மரத்தை அழித்தவர் தான் இந்த எடப்பாடி என்றும் அவர் கடும் விமர்சனம் செய்தார்.
தினகரனுக்கு அழைப்பு இல்லை :
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி மேலும் ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன், தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி தூக்கி வீசப்படும் என்றும் கள்ளக் குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தர்.
Thanks for Your Comments