10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த முதியவர் !

0
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம் பட்டு அடுத்த தென் முடியனூரைச் சேர்ந்தவர் கூழித்தொழிலாளி விஜயகுமார். இவரது மனைவி அன்புகுமாரி. இந்த தம்பதி களுக்கு கீதா(10) மற்றும் பிரபு(8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கீதா அன்பு குமாரியின் தாயான பாட்டி வீட்டில் தங்கி, அங்கிருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில், சிறுமி கீதா அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் (60) என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அங்குள்ள கரும்புத் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.


இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை பார்வை யிட்டனர், கீதாவின் பிறப்புறுப்பு மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்துள்ளது. 
இதனை தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து, உடல் பிரேத பரிசோதனைக் காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

சிறுமி உடல் பிரேத பரிசோதனைக் காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. 
அது கொலை நடந்த இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தான் கணேசன் மீது குற்றம் இருப்பது தெரிய வந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)