சிறுமிக்கு பாலியல் தொல்லை - போலீஸ் அதிகாரி கைது !

0
சென்னை வில்லி வாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக காவல் 
சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக வாசு என்பவர் பணிபுரிகிறார். 


வில்லி வாக்கத்தில் வசிக்கும் இவர் தனது வீட்டின் அருகே உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது.

இதை அறிந்த அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் காவல் அதிகாரி வாசுவை அடித்து உதைத்து வில்லி வாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர். 

இதை யடுத்து போலீசார் காவல் அதிகாரி வாசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு கைது செய்தனர்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings