முத்துப் பேட்டை ஒன்றியத்தில் சுடுகாட்டில் சமைத்து உண்ணும் மக்கள் !

0
திருத்துறைப் பூண்டி தாலுக்கா முத்துப் பேட்டை ஒன்றியத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 36 குடும்பத்தினர் வீடு இல்லாத தால் சுடுகாட்டில் தஞ்ச மடைந்துள்ளனர்.


தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. 

மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப் படுத்தும் பணி தொடர்ச்சி யாக நடைபெற்று வருகிறது. 

அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். 

அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தமிழக அரசு தீவிரமாக நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 

அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், பொது மக்கள் என பல தரப்பினர் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலை யில், திருத்துறைப் பூண்டி தாலுக்கா முத்துப் பேட்டை ஒன்றியத்தில் 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 36 குடும்பத்தினர் வீடு இல்லாத தால் சுடுகாட்டில் தஞ்ச மடைந்துள்ளனர். 


பின்னத்தூர் ஊராட்சி தெற்கு ஜீவா தெருவில் உள்ள 120 க்கும் மேற்பட்ட வர்களின் வீடுகள் கஜா புயலால் முற்றிலும் சேதமடைந் துள்ளன. 

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதான சாலையில் உள்ள சுடுகாட்டில் தஞ்ச மடைந்து அங்கேயே சமைத்து உண்டு வருகின்றனர்.

முகாம் அமைத்து தராததால் சுடுகாட்டில் தஞ்ச மடைந்துள்ள தாக மக்கள் வேதனை தெரிவித் துள்ளனர். 

இவர்களின் வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்றும் அதுவரை தங்க சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings