இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா கார் திருட்டு !

0
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கார் காணாமல் போனது. காரை திருடிச் சென்ற டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா கார் திருட்டு !
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப் பாளருமான யுவன்சங்கர் ராஜா திருமணமாகி மனைவியுடன் 

சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.

இவரது மனைவியின் பயன் பாட்டுக்காக ஆடி ஏ-6 உயர் ரக கார் ஒன்றை வைத்து ள்ளனர். கார் ஓட்டு வதற்கு நவாஸ்கான் சாதிக்(34) என்கிற ஓட்டுநரை நியமித் துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக் காக யுவன் ஷங்கர் ராஜா மதுரை சென்று ள்ளார். வீட்டில் அவரது மனைவியும் உறவின ர்களும் இருந் துள்ளனர். 

நேற்று மாலை 5-00 மணி அளவில் ஓட்டுநர் நவாஸ் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவுவரை திரும்ப வரவில்லை. 
போன் செய்த போது அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது. காருடன் ஓட்டுநர் நவாஸ் தலைமறை வானது தெரிய வந்தது.

இதையடுத்து இரவு 1-00 மணி அளவில் யுவன் ஷங்கர் ராஜா சார்பில் நாகராஜ் என்பவர் கார் திருட்டு போனது குறித்து எழும்பூர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் காருடன் தலைமறை வான ஓட்டுநர் நவாஸ்கான் சாதிக்கை போலீஸார் தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)