பார்க்கின்சன் நோய் அறிகுறிகள் என்னென்ன?

0
முதலில் நடுக்கம் போல ஆரம்பிக்கும் அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் பரவி தசைகளின் இயக்கத்தை முற்றிலும் பாதித்து விடுகிறது. 
 
இதற்கான காரணம் என்ன என்பதை அறிய இயலாததால் அறிகுறி களைக் கொண்டே இந்நோயைக் கண்டறி கின்றனர்.

1. நடுக்கம் :

இந்நோயின் பொதுவான அறிகுறியாக நடுக்கம் தோன்று கிறது. அதிகப் படியான உடற்யிற்சி, 

மன அழுத்தம், விபத்து, மருந்துகள் போன்ற வற்றால் ஒருவருக்கு சாதாரண மாக நடுக்கம் தோன்றும். 

ஆனால் இந்நோய் இருப்பவர் களுக்கு அமைதியான சூழலிலும் நடுக்கம் உண்டாகிறது.

2. சிறிய கையெழுத்து:

வயதாகும் போது அல்லது கையில் அடிபடும் போது சரியாக எழுத முடியாது, இது இயல்பு தான். 

ஆனால் நன்றாக எழுதுவபரின் கையெழுத்து இயல்பானதை விட சிறியதாக மாறும். 

எழுத்துக்கள், தெளிவில்லாமல், ஓர் எழுத்தின் மீது இன்னொரு எழுத்தை எழுதுவர்.

3.வாசனைத் திறன் இழப்பு :
குளிர் காலத்தின் போதும், மூக்கடைப் பின் போதும் சரியாக நுகர முடியாது, இது இயல்பு . 

ஆனால் இந்நோயால் பாதிக்கப் பட்டவரால் வாசனையைக் கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுவர்.

4.தூக்கப்பிரச்சனை :

திடீரென தூக்கத்தி லும் நடுக்கம் ஏற்பட்டுத் தூக்கத்தை பாதிக்கிறது.

5. நடக்கவும் சிரமம்:

நடப்பதிலும் , எளிமை யான செயல்களை செய்யவும் கடினப்படுவர். கை, கால் மற்றும் உடலில் ஒரு வித தொய்வு ஏற்படும். 

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் பாதம் தரையோடு சிக்கிக் கொள்கிறது என்கின்றனர்.

6. மலச்சிக்கல்:

உடலில் நீரின் அளவும், நார்ச் சத்தும் குறைவாக இருக்கும் போது மலச்சிக்கல் உருவாகும்,

இது இயற்கை. ஆனால் இங்கே பாதிக்கப் பட்டவர் அதிகளவில் மலச் சிக்கலால் பாதிக்கப் படுவார்.

7. குரல் மாற்றம் :

இயல்பாக பேசுவதை விடக் குரலானது மென்மை யாக அல்லது கரகரப்பான குரலாக மாறிவிடும்.

8. வருத்தமான உணர்வு :

முகத்தில் எப்போதும் ஒரு வருத்தமான உணர்வு இருப்பது போலவே தோன்றும். 

நீங்கள் சாதாரண மாக இருப்பதாகக் கருதினாலும் இவர்களைப் பார்ப்பவர்கள், ஏன் வருத்தமாக இருக்கி றீர்கள் என்று கேட்பர்.
9.கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படும்.

இந்த அறிகுறி களோடு பேசுவதிலும் பிரச்சனை ஏற்படலாம். பார்வைத் திறன் குறையும். உடலில் விறைப்பு தன்மை ஏற்படும். நேராக நிற்க முடியாமல், கூன் விழும்.

சிகிச்சைகள் :

பெரும் பாலும் இந்த நோயைக் குணப்படுத்த முடிவ தில்லை. அறிகுறி களைக் குறைக்கவும், கட்டுப் படுத்தவும் மருந்துகள் வழங்கப் படுகிறது. 
 
இதனைக் கொண்டு வாழ்க்கையைச் சுலபமாக நடத்த முடியும். மேலும் நோய் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

பாதிக்கப் பட்டவர் சிறந்த நியூராலஜிஸ்ட், பிஸியோ தெரபிஸ்ட்டை அணுகுவது நல்லது. தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டும். 

தனிமையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உடலை மட்டுல்லாமல், மனதையும் மிகவும் பாதிக்கிறது, 
இந்நோய். எனவே தன்னம் பிக்கையை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
பாதிக்கப் பட்டவர் மட்டு மல்லாமல் அவரின் மீது அன்பு கொண்ட வரும் அவரின் நிலையால் பாதிக்கப் படுகின்றனர். 

நாம் அனைவரும் இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்க ளுக்கு உறுதுணை யாக இருக்க வேண்டும். அதுவே இந்த நாளை அர்த்த முள்ளதாக் கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)