'ஏர்செல்' முடக்கிய ரூ. 50 ஆயிரம் கோடி யாரிடம் சேரும்? | 'Aircel' muted Rs. Who will get 50 thousand crore?

0
செல்போன் நிறுவனங் களின் சேவை அறிவிப்புகள் தரும் மகிழ்ச்சியை விட, அவற்றின் திடீர் துண்டிப்பு அறிவிப்பு பல மடங்கு துயரத்தைத் தந்து விடுகிறது. 


ஏர்டெல், ஏர்செல், ஐடியா, டோகோமோ, யுனினார், ஜியோ, ரிலையன்ஸ் போன்ற ஏராள மான தனியார் செல்போன் நிறுவனங்கள் நாட்டில் இருக் கின்றன. 

அந்த வரிசையில், கோடிக்கணக் கான வாடிக்கை யாளர் இணைப்பைக் கையில் வைத்திருந்த 

'ஏர்செல்' நிறுவனம் மூடப் படுகிறது என்ற தகவல் கடந்த வாரங் களில், பரவியது. 

ஏர்செல் டவர் பல இடங்களில் கிடைக் காமல் போனதே இதற்கு முக்கியக் காரண மாகச் சொல்லப் பட்டது. 

அதே வேகத்தில், அந்தத் தகவல், வதந்தி என்ற தகவலும் கூடவே பரவியது. 

"தமிழக த்தில் ஏர்செல் நிறுவனம் அப்படியே தான் இருக்கும், வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி" என்று 


வாடிக்கை யாளர்களுக்கு ஏர்செல் நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பிய தால், மக்கள் மீண்டும் ஏர் செல்லுக்கு ரீ- சார்ஜ் செய்ய ஆரம்பித்தனர். 

எல்லாம், சில நாள்கள் தான் நீடித்தது."ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா போன்ற 

வங்கிகளில் வாங்கிய 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க் கடனை எங்களால் திருப்பிச் செலுத்த முடிய வில்லை. 

எங்கள் நிறுவனம் 'திவால்' ஆனதாக அறிவி யுங்கள்" என்று தேசிய நிறுவன தீர்ப்பாய த்தில், ஏர்செல் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

இந்த மனுதான் மக்கள் சுதாரித்துக் கொள்ளக் காரணமாக இருந்தது. மக்கள், வேறு செல்போன் சேவையைத் தேட ஆரம்பித்தனர். 

தமிழக த்தில் மிகப் பெரிய மொபைல் ஆபரேட்டர் சர்வீஸாக இருந்த ஏர்செல் நிறுவன த்தின் இந்த அறிவிப்பு, வாடிக்கை யாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

பதினைந்து ஆண்டு காலமாக ஏர்செல் நெட்வொர்க் சேவையைப் பெற்ற பலர், அந்த எண்ணை திடீரென மாற்றிக் கொள்வது சாத்தியம் இல்லை. 

தொழில், குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று பலருக்கு, அந்த எண்ணே, முகமும்- முகவரியு மாக இருந்து கொண்டிரு க்கும் என்பதே அதற்குக் காரணம்.

இந்நிலை யில் ஏர்செல் கொடுத்த அதிர்ச்சி யால் மக்கள் வழக்கம் போல, ஏர்செல்லு க்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு, அங்கிருந்து வரும் 'கோட்' எண்ணைப் பெற காத்துக் கிடந்தனர். 

அப்படித் தகவலை அனுப்ப ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் கிடைக்க வேண்டும், ஆனால் சிக்னல் கிடைக்க வில்லை. 

சிக்னலைத் தேடி, பக்கத்து மாவட்டம் வரையில் செல்போனுடன் மக்கள் நகர்கிற நிலைமை தான் ஏற்பட்டது. 

இதைப் பற்றி அறிய சென்னை அண்ணா சாலையில் உள்ள, ஏர்செல் நிறுவன த்தைத் தொலை பேசியில் முயற்சி செய்தேன், நடக்க வில்லை. 

நேரில் சென்று அங்கிருந்த சேவை (?) நிர்வாகி களிடம், ஏர்செல் டூ வேறு நிறுவனம் மாறுவதில் இருக்கும் நடை முறைச் சிக்கல் களைச் சொன்னேன். 

"சார், வழக்கம் போல நீங்கள் எப்படி மெசேஜ் அனுப்பு வீர்களோ, அப்படியே இப்போதும் அனுப்பி னால் போதும். 

இல்லை யென்றால், 98410 12345 என்ற எண்ணுக்கு போன் செய்து 'ரிங்' கிடைத்து மறு முனையில் பேசியதும் 

உங்கள் 'சிம்' கார்டில் உள்ள கடைசி ஐந்து எண்ணைச் சொன்னால், வேறு செல்போன் சேவைக்கு நீங்கள் மாறி விடலாம்" என்றனர். 

'என்னுடைய பழைய ஏர்செல் எண்ணில், 300 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்து வைத்தி ருந்தேன், 

அந்தப் பணம், புதிய செல்போன் சேவைக் கணக்கிற்கு மாற்றப் பட்டு விடுமா?' என்று அப்பாவி யாகக் கேட்டேன். 

வேறு செல்போன் சேவைக்கு மாறுவது குறித்துப் பதில் சொல்ல மட்டுமே நாங்கள் இருக்கிறோம், மற்ற விவரங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது" என்றனர். 

விஸ்வநாதன் தமிழ்நாடு அனைத்து செல்ஃபோன் மற்றும் ரீசார்ஜ் விற்பனை யாளர் சங்கத்தின் தலைவர் எஸ். விஸ்வநாதன், "ஏர்செல் நிறுவனத்தின் மிகப் பெரிய ஊழல் இது. 

நாளை, அடுத்த நிறுவனமும் இதே முடிவை எடுக்க இவர்கள் வழிகாட்டி விட்டிருக் கிறார்கள். அரசாங்கமும் மௌனம் சாதிக்கிறது. 


தமிழக அளவில் இருக்கும் ஒன்றரை லட்சம் வாடிக்கை யாளர்களில் பாதி பேருக்கும் மேல் தங்களின் செல்போனில் பேலன்ஸ் தொகையைக் கையில் வைத்திருக் கிறார்கள். 

அதாவது கஸ்டமர் டாக் டைம் வேல்யூ என்று சொல்லக் கூடிய பேசாமல் விட்ட பேலன்ஸ் தொகை மட்டுமே 

15 ஆயிரம் கோடி ரூபாய். மக்களுக்கு அந்தப் பணத்தை திரும்ப ஒப்படைக்க வில்லை என்றால், 

அந்தப் பண மெல்லாம் யார் கைக்குப் போகப் போகிறது? எந்தக் கேள்வி க்கும், யாரிடமும் பதில் இல்லை. 

ஒழுங்கு முறை ஆணைய மான 'ட்ராய்' இதை எப்படி அனு மதிக்கிறது? செல்போன் கோபுரங்கள் வைத்துக் கொள்ள இடம் கொடுத்த வர்களின் நிலைமை என்ன? 

எங்களைப் போன்ற வணிகர் களின் கையில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரீ-சார்ஜ் கூப்பனை வைத்திருக் கிறோமே, 

அதை யார் ஈடு கட்டுவது? 'டிஸ்ட்ரி பியூட்டர்ஸ் சாட்ஸ்' மட்டுமே, 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முடக்கப் பட்டு கிடக்கிறதே, இதற்கு வழி என்ன ? 

ரீ- சார்ஜ் கூப்பன் களைக் குப்பையில் கொட்டு வதைத் தவிர வேறு வழி யில்லை என்று சொல்லாமல் சொல்கிற துணிச்சலை, ஒரு தனியார் நிறுவன த்துக்குக் கொடுத்தது யார்? 

ஏர்செல் நிறுவன த்தில் பதினைந்து ஆண்டு களுக்கும் மேலாகப் பணி யாற்றிய ஊழியர் களின் நிலைமை என்ன ? இப்படிக் கேள்விகள் ஏராளம். 

அத்தனை கேள்வி க்கும் பதில் சொல்ல வேண்டு மென்றால், குறைந்த பட்சம் 50 ஆயிரம் கோடி ரூபாயுடன் ஏர்செல் நிறுவனம் பொது மேடைக்கு வர வேண்டும். 

எங்களைப் போன்ற வணிகர் களுக்கு உள்ள பெரிய வருத்தமே, எந்தப் போராளி யும் இதற்குக் குரல் கொடுக்க வில்லையே என்பது தான். 

வணிகர் சங்கங் களின் பாதுகாவலர் விக்ரமராஜா அவர்க ளுடன், இது குறித்துக் கலந்து பேசி யுள்ளோம். 

அடுத்த இரண்டு நாள்களில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த வுள்ளோம். ஏர்செல் நிறுவனத்தின் இந்த மோசடியை சட்டரீதியாக எதிர் கொள்ள முடிவெடுத் துள்ளோம்" என்றார்.

ஏர்செல் நிறுவன த்தின் தென்னிந்திய சி.இ.ஓ. பொறுப்பில் உள்ள கே.சங்கர நாராயணன், "அவ்வப் போது நிறுவனத்தின் சூழ்நிலையை 

மக்களுக்கு ஊடகங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கி றோம். 

இப்போதைய சூழல் குறித்து எதுவும் சொல்ல முடிய வில்லை. இது பற்றி நாளை பேசுகிறேனே" என்று முடித்துக் கொண்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)