தேசிய விருது முக்கியம் அல்ல தமிழர்களே முக்கியம்.. விஜய் !

தேசிய விருதை விட தமிழர்களும் தமிழக மக்களின் நலனும் தான் முக்கியம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 
தேசிய விருது முக்கியம் அல்ல தமிழர்களே முக்கியம்.. விஜய் !
கருப்பன் திரைப்பட விழாவில் தேசிய விருது கொடுக்கப் பட்டால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா என்ற செய்தி யாளர்களின் கேள்விக்கு, என் ஊரும் என் ஊரு மக்களும் தான் முக்கியம். 

அதனால் தேசிய விருதை கண்டிப்பாக ஏற்க மாட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் நாட்டு மக்கள் நசுக்கப் படுகிறார்களா என கேட்காதீர்கள். 

ஏனென்றால் நாம் நசுக்கப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். நாம் உணர்ச்சி வசப்படாமல் செயல்களின் மூலம் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்திய ஜனநாயகத்தில் உள்ள அனை வருக்கும் அரசியலுக்கு வர உரிமை உள்ளது என தெரிவித்த விஜய் சேதுபதி, மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எனவும் 
அது நடிகர்களாக இருந்தாலும் பராவாயில்லை எனவும் தெரிவித்தார்.கலைத் துறையில் உள்ள பலரும் தேசிய அளவில் அங்கீகாரமாக கருதுவது தேசிய விருதை தான். 

அப்படி இருக்கையில் நடிகர் விஜய் சேதுபதி தேசிய விருது கொடுக்கப் பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனக் கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings