எப்படி ஆயிரக்கணக்கில் பணத்தை கடத்துகிறார்கள்?

எப்படி எல்லாம் கணக்கு போடுறாங்க பணத்தை? கோடிகள்ல புரள்ற வங்களுக்கு அந்தப் பணத்தை எண்றதுக்கு நேரமில்லையாம்.. பழைய பேப்பர் எடை போட்டுக் கொடுக்கிற மாதிரி எல்லாம் கிலோ கணக்குத் தான்..
எப்படி ஆயிரக்கணக்கில் பணத்தை கடத்துகிறார்கள்?
1 கோடி ரூபாய் பணம்னா அது 1000 ரூபாய் நோட்டா இருந்தா 17 கிலோ இருக்குமாம். எண்ண வேண்டியதே இல்லையாம். இதே 500 ரூபாய் நோட்டாயிருந்தா 35 கிலோ வாம்.

100 ரூபாய்ன்னா அது ஒரு கோடிக்கு 114 கிலோ இருக்குமாம். பொதுவா இப்படி கோடிக்கணக்கான பணத்தை கையால எண்றதுக்கு பதிலா மெஷின்ல வச்சி எண்ணுவாங்க.

இப்போ அதுக்குக் கூட நேரமில்லாம கருப்புப் பணம், கணக்கில வராத பணம் வச்சிருக்கிற வங்க எடை மெஷின்ல எடை போட்டு இத்த‍னை கோடின்னு கணக்குப் போட்டு பாத்துக் கறாங்களாம். யம்மாடீ..

இந்த ரூபாயெல்லாம் சாலைகள் வழியாக எந்த சந்தேகமும் ஏற்படாத வண்ணம் கன்ட்டெய்னர்கள்ல கொண்டு போறாங்க.

அப்படி கொண்டு போறதுல ஒவ்வொரு கன்டெய்னரிலும் எவ்வளவு இருக்கும்னு பாத்தா பெரிய பாக்ஸ் கன்டெய்னர்ல ஒண்ணே முக்கால் டன்

எடை வரை பணக்கட்டுகளை நெருக்கி ஏத்தலாமாம். ஆயிரம் ரூபாய் நோட்டாக இருந்தால் ஆயிரத்து 51 கோடி ரூபாயா இருக்குமாம்.

சின்ன கன்டெய்னர்னா ஒரு பாக்ஸில் முக்கால் டன் (750 கிலோ) ஏத்தலாமாம். அதே ஆயிரம் ரூபாய் நோட்டாக இருந்தால் 525 கோடியே 50 ஆயிரம் ரூபாய் அதில் பிடிக்குமாம்..
பொதுவாகவே கன்டெய்னர் கூட்ஸ் என்றாலே எந்த இடத்திலும் ஓப்பன் பண்ணிக் காட்ட வேண்டியது இருக்காதாம்.

ஏனென்றால், அவ்வளவு பெரிய கூட்ஸின் பெட்டிகளின் ‘லாக்’ கை சாதாரணமாக ஓப்பன் செய்து டோல் கேட்களில் காட்டிக் கொண்டிருக்க முடியாது.

அவர்களைப் பொருத்த வரை ஏதோ கன்டெய்னர் போகிறது… அது யாரோ ஒருவரின் கம்பெனி கன்டெய்னர் அவ்வளவு தான் என்ற அளவில் தான் செக்கிங் ஷோவே இருக்குமாம்.

அதிகமாக அது பற்றிக் கேட்டால் கம்பெனி பில்லைக் காட்டு வதோடு, வழக்கமாக ‘கொடுப்பதை’ விட கொஞ்சம் கூடுதலாய்க் கொடுத்து விட்டு கன்டெய்னரை அங்கிருந்து கொண்டு போய் விடலாமாம், 

அவ்வளவு தான் ரொம்பவும் ஈசி. 20, 40, 60 அடிங்கிற அளவுகள்ல கண் டெய்னர்கள் இருக்கு. ஆனா இப்படி ரகசியமா பணம் கொண்டு போற வங்க 60 ஃபீட் கன்டெய்னர்கள்ல தான் கொண்டு போவாங்களாம்.

ஏன்னா அதை ஃபாரீன் கூட்ஸ்னு தான் கணக்குல காட்டி ஆகணுமாம், வேற வழியே கிடையாதாம். 

அந்தக் கணக்குல தான் இந்த பணமெல்லாம் ரொம்ப ரகசியமா யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாற அதுவும் நைட்ல தான் பக்காவா தார்பாய் ஸ்க்ரீன் போர்த்திக் கொண்டு எடுத்துட்டுப் போவாங்களாம்.

இப்படித் தான் ஆயிரக்கணக்கான கோடிகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நெடுஞ்சாலை கள் வழியாகப் போய்க் கொண் டிருக்கின்றதாம்.
எப்படி ஆயிரக்கணக்கில் பணத்தை கடத்துகிறார்கள்?
இப்ப தேர்தல் நேரத்தில இந்த மாதிரி கன்ட்டெய்னர்கள் வழியா பணம் போகு தாங்கிற ஆராய்ச்சி நமக்கு வேணாம்.

ஆனா தேர்தல் பறக்கும் படையைச் சார்ந்த அதிகாரிகள் மாருதி ஆட்டோவையும், Hyundai Ean காரையும் செக் பண்ணி சில நேரங்கள்ல ஆயிரக்கணக்குல,

கணக்குல வராத பணத்தை பறிமுதல் பண்ணிகிட்டு இருக்காம இப்படியான கன்டெய்னர்களையும் செக் பண்ணா கணக்கில் வராத

ஆயிரக் கணக்கான கோடிகளை பறிமுதல் செய்ய வாய்ப்பிருக்கலாம். எந்த வழியா எவ்வளவு பணம் போகுதுன்னு யாருக்கு தெரியும்?

ஆனா இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரங்கள். நாமெல்லாம் சொன்ன எடுபடவா போகுது? பெட்டைக்கோழி கூவியா பொழுது விடியப் போவுது..
Tags: