தண்ணீர் பால் தான் நல்லது? உண்மையா?

1
சூரியன் இல்லாமல் கூட ஒரு நாள் நமக்கு விடிந்து விடும். பால் இல்லாமல்? காபி, டீ, தயிர், மோர்...  ஏதாவது ஒரு வடிவில் பாலை நாம் எல்லோருமே ஒவ்வொரு நாளும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். 
தண்ணீர் பால் நல்லது?
ஆனால், பாலை எப்படிக் குடிக்க வேண்டும்; எப்போது சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?

பாலில் என்ன இருக்கிறது?

பால் தண்ணியாக இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். பால் தண்ணீரைப் போல இல்லாவிட்டால் தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். 

ஏனெனில், பாலில் 87 சதவிகிதம் தண்ணீர் தான் இருக்கிறது; 13 சதவிகிதம் தான் இதர வேதிப்பொருட்கள். இதில் நான்கு சதவிகிதம் கொழுப்பு; ஒன்பது சதவிகிதம் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள். 
இந்த நிலையில் உள்ள பால் தண்ணிப் பாலாகத் தான் காட்சி அளிக்கும். இதுதான் உடலுக்கும் நல்லது. 

ஒரு வேளை பால் கெட்டியாக இருந்தால், ஒன்று அது கொழுப்பு, புரதம் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட பாலாக இருக்க வேண்டும்.

அல்லது ஜெலாட்டின், மரவள்ளி மாவு, ஜவ்வரிசி போன்ற வஸ்துகள் ஏதாவது சேர்க்கப் பட்ட பாலாக இருக்கும்.

மாட்டின் மடியில் இருந்து கறக்கப்படும் பால், பாக்கெட்டில் அடைக்கப் படும் வரை என்ன தான் நடக்கிறது?’

சென்னை சோழிங்க நல்லூரில் இருக்கும் ஆவின் பால் பண்ணையை ஒரு முறை வலம் வந்த போது, இந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது.

கிராமங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பாலைக் கொள்முதல் செய்யும் போதே 'லாக்டோ மீட்டர்’ (Lactometer) என்ற கருவியைப் பயன்படுத்திப் பாலைப் பரிசோதிக்கிறார்கள். 

இது பாலில் தண்ணீர் கலக்கப்பட்டு இருக்கிறதா என்பதற்கும் சத்துக்களின் அளவு குறைந்திருக் கின்றனவா எனக் கண்டறி யவும் பயன் படுகிறது. 
தண்ணீர் பால்
பின்னர், குளிரூட்டும் நிலையத்துக்குப் பால் அனுப்பப் படுகிறது. அங்கு மூன்று முதல் ஐந்து டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில் குளிர வைக்கப் பட்டு, டேங்கர் லாரிகள் மூலம் பால் பண்ணை க்குக் கொண்டு வரப்படுகிறது.

லாரிகளில் கொண்டு வரப்பட்ட பால் 16 வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் படுவதோடு, அதில் இருக்கும் தூசு தும்புகளையும் வடிகட்டி நீக்குகிறார்கள்.

பின்னர் பாலின் வெப்ப நிலை 4 டிகிரி சென்டிகிரேடுக்கு மாற்றப் பட்டுப் பெரிய கொள் கலன்களில் சேமிக்கப் படுகிறது.

பிளேட் ஹீட் எக்சேஞ்சர் எந்திரத்தின் மூலம் HTST (High temprature short time) என்ற முறையில் பாலானது 74 முதல் 76 டிகிரி சென்டிகிரேட் அளவு சூடேற்றப்படுகிறது. 
இப்படி 15 நொடிகள் சூடேற்றும் போது பாலில் உள்ள தீமை செய்யக் கூடிய கிருமிகள் அழிந்து விடும். பின்னர் பாலானது ஐந்து டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலைக்கு குளிர் விக்கப் படுகிறது. 

இதற்குப் பதப்படுத்துதல் என்று பெயர். பின்னர் 'பாஸ்படேஸ் டெஸ்ட்’ (Phosphatase Test) மூலம் சரியாகப் பதப்படுத்தப் பட்டு இருக்கிறதா என்றும் பரிசோதிக்கிறார்கள். 

பின்னர், சாகடிக்கப்பட்ட கிருமிகளை வடிகட்டி நீக்குகிறார்கள். அடுத்ததாக, பாலில் உள்ள கொழுப்புகளை உடைக்கும் பணி (Homogenisation) நடக்கிறது. 

பொதுவாகப் பாலில் உள்ள கொழுப்பானது 20 முதல் 25 மைக்ரான் அளவு வரை இருக்கும். இப்போது கொழுப்பானது மிகச் சிறிய திவலைகளாக - ஒரு மைக்ரான் அளவுக்கு - உடைக்கப் படுகிறது. 

இதனால், பாலில் உள்ள கொழுப்பு தனியாகப் பிரியாமல், பாலுடன் கலந்து விடுவதோடு எளிதில் ஜீரணமாகும் தன்மையையும் பெறுகிறது.

அதன் பிறகு கொழுப்பின் அளவுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு தேவையான அளவுகளில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, விற்பனைக்காக அனுப்பி வைக்கப் படுகிறது!
தொழிற் சாலை யிலேயே கிருமிகள் நீக்கப்பட்டு விடுவதால், பாக்கெட் பாலை மறுபடியும் காய்ச்சத் தேவை இல்லை. 

அப்படியே குடிக்கலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது சரியா?

ஆவின் துணை மேலாளரும் தரக்கட்டுப் பாடு அதிகாரியு மான டாக்டர் கே. அன்பரசு நம் சந்தேகத்துக்கு விடை கூறினார்.

'குறிப்பிட்ட வெப்ப நிலையில் பாலைச் சூடுபடுத்தும் போது, தீங்கிழை க்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு விடும். எனவே, பாலைக் காய்ச்சாமல் அப்படியே குடிக்கலாம். 

கடையில் இருந்து வாங்கியதும் உடனடியாக அந்தப் பாலைப் பயன்படுத்தி விடுவது நல்லது. பாக்கெட்டில் அச்சிடப்பட்டு இருக்கும் தேதி வரையிலும் ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். 

அச்சிடப் பட்டிருக்கும் தேதியையும் தாண்டி ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தும் போது சைக்ரோஃபில்ஸ் (Psychrophiles) என்ற  கிருமி பாலைத் தாக்கக் கூடும். 

இந்தக் கிருமியால் நமக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனால், பாலில் உள்ள புரதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கிருமி தின்று தீர்த்து விடும். 

இதனால், நீங்கள் பாலைக் குடித்தாலும் அதில் புரதச் சத்து இருக்காது. ஊட்டச் சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆலோசக ரான அனிதா தங்கதுரை 

இது பற்றி கூடுதலாகச் சொல்லும் கருத்தும் கவனிக்கத்தக்கது. கூடுமானவரை தேவைக்கு ஏற்ற அளவில் பாக்கெட் பாலை வாங்கி முழுவதையும் உடனே பயன்படுத்துவதே சிறந்தது. 
உணவுக் கட்டுப்பாடு
நடைமுறைக்கு இது சாத்தியம் இல்லை என்று கருகிறவர்கள் முதல் முறை முழுவதுமாகக் காய்ச்சி ஃப்ரிட்ஜுக் குள் வைத்து விட்டு, 

அடுத்த முறை காய்ச்சும் போது எவ்வளவு பால் தேவையோ, அதை மட்டும் எடுத்துக் காய்ச்சுவது நல்லது.

பாலைக் கொதி வரும் அளவுக்கு காய்ச்சுவது தான் சிறந்ததா?

நமது இந்தச் சந்தேகத்தைத்தையும் அன்பரசுவிடமே கேட்டோம். ''பால் காய்ச்சுவது என்பது பாலை நன்றாகக் கொதிக்க வைப்பது என்று பலர் நினைக்கி றார்கள். 

அப்படிக் காய்ச்சும் போது பாலில் உள்ள அல்புமின், குளோபுலின் போன்ற புரதங்கள் வெள்ளை நிறத்திலும் சர்க்கரைச் சத்தான லாக்டோஸ் பழுப்பு நிறத்திலும் பாத்திரத்தில் ஒட்டிக் கொள்கின்றன. 

எனவே, 40 டிகிரி சென்டிகிரேட் அளவுக்குப் பாலைச் சூடுபடுத்தி னாலே போதும். பால் சூடாகிக் குமிழ்கள் தோன்ற ஆரம்பிக்கும் போதே, இறக்கி விட வேண்டும். 

குக்கரில் ஒட்டாது என்பதால் அதில் காய்ச்சுவதுதான் சிறந்தது. அதிகமாகப் பால் கறக்க வேண்டும் என்பதற்காக மாடுகளுக்குச் சில வகை ஊசிகளைப் போடுகி றார்கள். 

இப்படி ஊசி போடப் பட்டுக் கறக்கும் பாலைக் குடிப்பதால் பிரச்னை எதுவும் ஏற்படுமா?

இந்தச் சந்தேகத்து க்கு விளக்கம் தந்தார் தமிழ்நாடு கால்நடை சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் எஸ். பிரதாபன்.
'கன்றுக்குட்டியைப் பார்த்ததும் தாய்ப்பசுவின் உடலில் ஆக்ஸிடோசின் என்ற ரசாயனம் சுரப்பதால், பாலின் சுரப்பு அதிகரிக்கும். 

அதிகமாகப் பால் கறப்பதற்காக சிலர் இந்த ரசாயனத்தை ஊசி மருந்து மூலம் பசுவுக்குச் செலுத்து கின்றனர். 

இப்படிக் கறக்கப்படும் பாலைத் தொடர்ந்து குடித்து வரும் போது, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு.

பால், பருப்பு... இவற்றில் எதில் புரதம் அதிகமாக இருக்கிறது?

இந்தக் கேள்விக்கு டயட்டீசியன் தாரிணி கிருஷ்ணன் பதில் சொன்னார். பருப்பில் இருந்து கிடைக்கும் புரதத்தைவிடப் பாலில் இருந்து முழுமையான புரதம் கிடைக்கிறது. 
உதாரண மாக, 100 மி.லி. பாலில் 3.2 சதவிகிதம் புரதம் உள்ளது. இதில் குறைந்தது 3 சதவிகிதப் புரதம் நம் உடலுக்குக் கிடைத்து விடும். 

ஆனால், 100 கிராம் பருப்பில் 22 முதல் 28 சதவிகிதம் வரை புரதம் உள்ளது. இதில் 16 முதல் 18 சதவிகிதம் மட்டுமே உடலுக்கு முழுமை யாகக் கிடைக்கும்.

உணவு சாப்பிட்ட பிறகு டீயோ, காபியோ சாப்பிடலாமா?

இந்தக் கேள்விக்கு டயட்டீசியன் தாரிணி கிருஷ்ணன் சொன்ன பதில் பலரையும் யோசிக்க வைக்கும். பாலைக் காய்ச்சும் போது அதில் உள்ள வைட்டமின்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. 
சாப்பிட்ட பிறகு டீயோ, காபியோ சாப்பிடலாமா?
பாக்கெட் பாலில் தண்ணீர் கலந்து காய்ச்சும் போது, கொழுப்பின் அளவும் குறையும். பாலுடன் டீத்தூள் சேரும் போது ஆக்ஸலேட் மற்றும் ஃபைடேட் (Oxalate & Phytate) என்ற ரசாயனங்கள் உருவாகின்றன. 

உணவுடன் சேர்த்து டீ குடிக்கும் போது உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் தன்மையை இந்த ரசாயனம் தடுக்கிறது. 

எனவே தான், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றிலோ அல்லது உணவு வேளை களுக்கு இடையிலோ தான் நாம் டீ சாப்பிடுகிறோம்.'
Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

Post a Comment