மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரா் பலி !

தேனி அருகே முன்னாள் ராணுவ வீரரான ரஜினிகாந்த் மின்சார கருவி மூலம் மாட்டில் பால் கரந்த போது மின்சாரம் தாக்கி ரஜினிகாந்த் உயிாிழந்தாா். மாடும் உயிாிழந்தது.
மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரா் பலி !
ரஜினிகாந்த் ராணுவத்தில் பணியாற்றி விட்டு, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது நிலத்தை சீர் திருத்தம் செய்து அதில் தீவனப் புற்கள் வளர்த்து, அதன் மூலம் பசு மாடுகளை பராமரித்து வந்தார். 

பால் கறப்பதற்காக பால் கறக்கும் கருவியை பயன்படுத்தி வந்தார். இந்த கருவி மின்சாரம் மூலம் இயங்குவது ஆகும்.நேற்று காலையில் வழக்கம் போல் ரஜினிகாந்த் பால் கறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது ஒரு மாட்டில் பால் கறந்து கொண்டு இருந்த போது எதிர் பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பசு மாடும் அதே இடத்தில் பலியானது.

அப்போது அருகில் நின்று கொண் டிருந்த அவருடைய மனைவி ஜெயலட்சுமி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் அவருக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டது. 

இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மின் சாரத்தை துண்டித்து விட்டு, ரஜினி காந்த்தை மீட்க முயன்றனர். ஆனால், அவர் இறந்து விட்டதை அறிந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத் துள்ளனர். 
காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு காயம் அடைந்து இருந்த ஜெயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

பலியான ரஜினிகாந்த் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags: