கன்னிப் பெண்ணாக மாற விரும்பும் பெண்கள் !

துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் போது, கன்னிப் பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறார்கள்.

கன்னிப் பெண்ணாக மாற விரும்பும் பெண்கள் !
இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

யாஸ்மின் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) பதட்ட மாக காணப்படுகிறார். அவர் தன்னுடைய விரல் நகங்களை கடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய செல் பேசியை தொடர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார்.
இந்த அறுவை சிகிச்சை மேற்கொள் வதை மோசடியாக கருதுகிறேன். உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன் என்று அவர் கூறுகிறார்.

துனீசியாவில் தனியார் சிகிச்சை மையத்தில் மகளிர் மருத்துவ சிகிச்சை யளிக்கும் நான்காம் மாடியில் அவர் இருக்கிறார். 

அவரை சுற்றியிருக்கும் ஊதாநிற காத்திருக்கும் அறையில், பிற பெண்கள் மருத்து வரை பார்க்க பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை மூலம் கன்னிப் படலத்தை மீண்டும் ஒட்டச் செய்யும், சிறியதொரு மருத்துவ சிகிச்சையான 

ஹேமன் நோபிளாஸ்டி செய்து கொள்வதற்கு வந்திருப்பதாக யாஸ்மின் பிபிசி செய்தி யாரிடம் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மாதத்திற்குள், அவருக்கு திருமணம் நடை பெறவுள்ளது. 28 வயதான அவர், தான் கன்னிப்பெண் அல்ல என்பதை கணவர் கண்டு பிடிக்கலாம் என்று மிகவும் கவலை யடைகிறார்.
விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கறையான்கள்
பிறப் புறுப்பின் கன்னித் திரையை ஒட்டச் செய்து முந்தைய நிலையை அடையும் நோக்கில் வந்துள்ள இவர், எதிர் காலத்தில் எப்போ தாவது உண்மை வெளிவரும் என்றும் பயப்படுகிறார்.

கன்னிப் பெண்ணாக மாற விரும்பும் பெண்கள் !
என்றாவது ஒரு நாள் என்னுடைய கணவரோடு உரையாடும் போது என்னை நானே காட்டிக் கொடுத்து விடலாம் அல்லது என்னுடைய கணவர் என்னிடம் சந்தேகம் கொள்ளலாம் என்கிறார் அவர்.

சில இளம் பெண்கள் கன்னித் தன்மை இழந்தவர்கள் என்று கணவன்கள் சந்தேகப் பட்டதால், திருமணமான சில மாதங்களில் விவாகரத்து செய்யப் பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
கிளிகள் பேசுவதற்கான காரணம்
முற்போக்கான குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்தவர்.

அவருடைய உண்மையான பாலுறவு வரலாற்றை அறிய வந்தால், அவருக்கு நிச்சயிக்கப் பட்டவர் திருமணத்தையே நிறுத்தி விடலாம் என்று அவர் அஞ்சுகிறார்.

நான் ஒருவரை காதலித்தேன். அந்நேரத்தில், என்னுடைய சமூகத்தில் எவ்வளவு பெரிய அழுத்தமுள்ளது என்பதையும், 

என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நான் கற்பனை செய்யவில்லை என்று ஆதங்கத்தை வெளியிடுகிறார் யாஸ்மின்.

இப்போது எனக்கு பயமாக இருக் கிறது. என்னைத் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப் பட்டவரிடம் இதை நான் தெரிவித்தால், 

எங்க ளுடைய திருமணம் நிச்சயமாக ரத்தாகிவிடும் என்று அவர் அங்கலா ய்கிறார்.

ஏறக் குறைய 30 நிமிடங்கள் நடை பெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 400 டாலர் (310யூரோ) யாஸ்மின் செலுத்த வேண்டும். 

தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் திருமணம் செய்ய இருப்ப வருக்கு தெரியாமல் ரகசியமாக பல மாதங்கள் அவர் பணத்தை சேமிக்க வேண்டி யிருந்தது.
2 மீட்டர் நீளம் உள்ள கடல் சிலந்தியின் படிமம் கண்டெடுப்பு
யாஸ்மினுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்பவர் ஒரு மகளிர் சிறப்பு மருத்துவர் ராசிட். சராசரியாக, 

கன்னிப் பெண்ணாக மாற விரும்பும் பெண்கள் !
வாரத்திற்கு இரண்டு கன்னித் திரையை மீண்டும் ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சை களை இவர் மேற் கொண்டு வருகிறார்.

தங்களுடைய குடும்பத்திற்கும், உறவினருக்கும் அவமான த்தை கொண்டு வரும் என்பதால். தன்னுடைய வாடிக்கை யாளரில் 99 சதவீதத்தினர் பயத்தால் அவரிடம் வருவதாக ராசிட் தெரிவிக் கிறார்.
தடுமாறும் டால்பின்கள்..
உண்மை யிலே தாங்கள் கன்னித் தன்மையோடு இல்லை என்பதை மறைக்க யாஸ்மினை போன்ற பலரும் முயல்கி ன்றனர்.

ஆனால், பெண்களின் கன்னித்திரை மாதவிடாய் காலத்தில் சுகாதார பட்டையை பயன்படுத்துவது போன்ற வேறு பல காரணங்களாலும் கிழிந்து போக வாய்ப்புக்கள் உள்ளது,

இதனால், திருமண த்திற்கு முன்னரே இவர்கள் உடலுறவு கொண்டு ள்ளனர் என்று தவறு தலாக குற்றுஞ் சாட்டப்படலாம் என்ற கவலையையும் பெண்களிடம் நிலவு கிறது.

மகளிர் சிறப்பு மருத்து வர்கள் கிழிந்து போன கன்னித் திரையை மீண்டும் ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்கின்றனர். 
இதில் விதி விலக்கு ஒன்று மில்லை என்று கூறும் ராசிட், சில மருத்து வர்கள் இந்த அறுவை சிகிச்சை அளிப்ப தில்லை. கன்னித் தன்மையை புனிதப் பொருளாக கருதுவோரின் கருத்துக்களை நான் ஏற்பதில்லை.

எனவே, இந்த சிகிச்சையை வழங்கி வருகிறேன் என்று தெரிவிக்கிறார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சில மத கோட்பாடு களுடனான, ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு இது.
கடலில் மேயும் பசுக்கள் 
நான் குறிப்பிடுவது போல இது ஆண் ஆதிக்கம் தான். இதற்கு எதிரான முழுப் போரை தொடருவேன் என்று அவர் தெரிவிக்கிறார்.

பாசாங்குத் தனம்

வட ஆப்ரிக்காவில் பெண்களின் உரிமைகளில் சிறந்த நாடாக துனீசியா கருதப்படுகிறது. 

ஆனால், மதமும், பாரம்பரியமும் திருமணம் ஆகும் வரை இளம் பெண்கள் கன்னித் தன்மையுடன் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகின றன.

பெண்கள் கன்னித் தன்மை இல்லாத வர்களாக இருப்பதை கண்டு பிடித்தால், விவாகரத்து பெற்று கொள்ளும் சட்ட உரிமையும் துனீசிய சட்டத்தில் உள்ளது.

கன்னிப் பெண்ணாக மாற விரும்பும் பெண்கள் !
வெளிப் படையான துனீசிய சமூகத்தில் இந்த விடய த்தில் மட்டும், நாம் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பாங்சாங்குத் தனம் 

உடையவராக மாறி விடுகிறோம் என்று சமூகவிய லாளர் சாமியா எல்லௌமி தெரிவிக் கிறார்.

"நவீன சமூகத் தில் வாழ்வ தாக நாம் கூறிக் கொள்கி றோம். ஆனால், பெண்க ளின் பாலியல் மற்றும் சுதந்திரம் என்று வருகின்ற போது, 
அதிக நவீனத் துவம் இல்லை என்பதால் ஒரு வகை யான பழமை வாய்ந்த சமூக பழமை வாதத்தை நியாயப் படுத்துவது கடின மாக உள்ளது" என்று அவர் குறிப்பிடு கிறார்.

கன்னித் தன்மை மிக மிக முக்கியம்

பொதுப் பல்கலைக் கழகம் ஒன்றில் ஹிச்செம்மை, பிபிசி செய்தி யாளர் சந்தித்தார். 29 வயதாகும் இந்த மாணவர் அடுத்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளார். 

திருமணம் செய்து கொள்ளும் பெண் கன்னித் தன்மை யுடன் இருக்க வேண்டும் என்பதை முக்கிய மாக கருதுகிறீர்களா? என்று பிபிசி செய்தி யாளர் அவரிடம் கேட்டார்.

என்னை பொறுத்த மட்டில் இது மிக மிக முக்கியம் என்று அவர் தெரிவித் தார். 

திருமணத்திற்கு பிறகு அவர் கன்னித் தன்மையுடன் இல்லை என்று நான் அறிய வந்தால், அவரை நான் ஒரு போதும் நம்ப மாட்டேன். அதனை நான் நம்பிக்கை துரோகமாக கருதுவேன். 

கன்னித் திரையை ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சை களை நம்ப வில்லை. அது சரியாக செயல் படும் என்று எண்ண வில்லை" என்று அவர் தெரிவித் திருக்கிறார்.

அவருக்கு அடுத்த தாக இருந்த இன்னொரு மாணவர் ராதௌவம் பேசுகையில், துனீசிய பராம்பரியம் பெண் களுக்கு மிகவும் கடுமை யானதாக உள்ளது என்று தெரிவித்தார்.

கன்னிப் பெண்ணாக மாற விரும்பும் பெண்கள் !
என்னைப் பொறுத்த மட்டில், இது முற்றிலும் பாசாங்கு தனம் என்று தெரிவித்த அவர், திருமணத்திற்கு முன்னர் இளம் ஆண்கள் சுதந்திரமாக பாலியல் உறவு வைத்து கொள்ளலாம். 
அப்படியானால், அதனை இளம் பெண்கள் செய்யும் போது எவ்வாறு குறை சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.
Tags: