ஒரு நொடியில் பகிரும் செய்தியால் ஏற்படும் பிரச்னைகள் !

சமூக வலை தளங்களில் பரப்பப்படும் ஃபேக் நியூஸ் பின்னே இருக்கும் அரசியலும், ஆபத்தும்! FakeNews. நீங்கள், வாட்ஸ் அப்பிலோ அல்லது
ஒரு நொடியில் பகிரும் செய்தி
ஃபேஸ் புக்கிலோ, Share செய்யும் Fake நியூஸ் களால் என்ன மாதிரி யான விளை வுகள் ஏற்படு கின்றன என என்றாவது யோசித்த துண்டா? உங்களுக்கு ஒரு சிறிய உதாரணம். 

கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத் பகுதியில் திடீரென ஒரு போட்டோவும் செய்தியும் சமூக வலை தளங்களில் வைரல் ஆகிறது. 

அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்ட லில் இருந்து நாய் மாமிசத்தை போலீசார் கைப்பற்றிய தாகச் சொன்ன செய்திதான் அது. உடனே வைரலா கிறது இந்த விஷயம். 

எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் அளவுக்கு பிரபலமான அந்தக் கடை, அடுத் தடுத்த நாட்களில் வெறிச்சோடிப் போகிறது. 

சமூக வலை தளங்களில் பரவிய செய்தி களால் அதிர்ச்சி யடைந்த மாநகராட்சி அதிகாரிகள், உடனே அந்த உணவக த்தின் மாதிரி களை எடுத்து சோதனை க்கு உட்படுத்து கிறார்கள். 

இறுதியில் அந்தச் செய்தி போலி யானது எனத் தெரிய வருகிறது. சில நாட்களில், இந்தப் போலியான செய்தியைப் பரப்பிய இளைஞர் ஒருவர் கைது செய்யப் படுகிறார். 

சமூக வலை தளங்கள் வேறு வேலையைப் பார்க்கப் போய் விட்டன. ஆனால், அந்த உணவக த்தின் வியாபாரம், நம்பகத் தன்மை அனைத்துமே ஒரே நாளில் சிதைந்து விட்டன. 
வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒரு வேளை அதே போன்ற தொரு செய்தி நம்மூரிலும் வந்திருந்தால், நாமும் இதையே தான் செய்தி ருப்போம். 

நீங்கள் சாதரண மாக, ஏதோ ஒரு நொடியில் பகிரும் செய்தி களினால், மறை முகமாக ஏற்படும் பிரச்னைகள் இப்படித் தான் இருக்கின்றன. 

இந்தக் குழந்தை யின் புகைப் படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும், ஜனகண மன பாடல் யுனெஸ்கோவால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப் பட்டது, 

பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டு பிடிக்கப் பட்டது, குளிர் பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவி விட்டது, 

திருநள்ளாறு கோயிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்று விடும், 

இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் என நாசா அறிவிப்பு (வதந்தி யால் ரொம்பப் பாதிக்கப் பட்டது நாசாவாகத் தான் இருக்கும்!), 

இந்த சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும், ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு, இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும், 

மோடி இளைஞர் களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவ ருக்கும் இலவச மாகத் தருகிறார், இலங்கைத் தமிழர்களு க்காக ஐ.நா.சபை வாக்கெடுப்பு நடத்துகிறது,

99 ரூபாய்க்கு 4G போன்…

ஸ்ஸ்ஸ்.. படிக்கும் போதே கண்ணைக் கட்டுதா? இது எல்லாமே இன்னும் கூட பரப்பப் பட்டுக் கொண்டிரு க்கும் வதந்திகள். இவற்றுள் பாதி வதந்தி களுக்கு, குறைந்தது ஐந்து வயது இருக்கும்.

இவற்றில் பெரும் பாலான வற்றைப் பார்த்தால் ‘அட… இதை யெல்லாம் பார்த்தாலே பொய்ன்னு தெரியுதே… இதை எல்லாம் படிக்காத பாமரர்கள் தான் பரப்புவாங்க’ ன்னு நீங்கள் கேட்கலாம்.

ஆனால், இதனை பாமரர்கள் மட்டுமல்ல, மெத்தப் படித்த மேதாவிகளே இதனைப் பரப்பு கின்றனர் என்பது தான் வேதனை. 

 உணர்ச்சிகளைத் தூண்டும் கட்டுக் கதை
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் க்ரூப்களில் இருக்கும் அனை வருமே இதனை ஒரு முறை யாவது பார்த்தி ருப்பீர்கள். 

இவை யெல்லாம் ஒரு வகையான உங்கள் உணர்ச்சி களைத் தூண்டும் கட்டுக் கதைகள் என்றால், இன்னொரு பக்கம் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி களும் பரவி வருகின்றன.

தடுப்பூசி போட்டால் ஆபத்து, 10 ரூபாய் நாண யங்கள் செல்லாது, புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் போன்றவை எல்லாம் இந்த ரகத்தில் அடங்கும். 

இதனை நிஜமாகவே நம்பு பவர்கள் நிலையை என்றாவது எண்ணிப் பார்த்தீர்கள் என்றால், இதன் ஆபத்து புரியும். இதற்கு சரியான உதாரணம் 10 ரூபாய் நாணயம் தொடர்பான செய்தி. 

ஏற்கெனவே உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என நிஜமாகவே அறிவித்து மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது மத்திய அரசு.

அதற்கடுத்த சில நாட்களில் 10 ரூபாய் நாணயமும் செல்லாது என செய்தி வந்தால் அவர்கள் மனம் எப்படி இருக்கும்? உடனே நம்பி விடுவார்கள் இல்லையா?

அப்படி நடந்தவை தான் 10 ரூபாய் நாணயங் களை பலரும் வாங்க மறுத்த சம்பவங்கள். உடனே அது தொடர்பாக அரசு தெளிவு படுத்த, பிரச்னை முடிந்தது.

உண்மை என்ன என்று அறியாமல், யார் அனுப்பி னார்கள் என்றே தெரியாமல், அது யாரைப் பாதிக்கும் என்ற தெளிவு கூட இல்லாமல், நீங்கள் பகிரும் செய்திகள் எங்கோ இருக்கும் ஒருவரைப் பாதிக்கிறது.

போலிச் செய்திகளின் மீது இருக்கும் ஈர்ப்பு மற்றும் சுவாரஸ்யம் காரண மாக மக்கள் மத்தியில் விரை வாகப் பரவியும் விடுகிறது. 

ஆனால், எது பொய், எது உண்மை எனப் பகுத்தறியும் குணம் கூடவா நம்மிடம் மங்கி விட்டது? இதில் அடுத்த கட்டம் தான் அரசியல், வணிகம், சினிமா சார்ந்த வதந்திகள். 
தங்களது போட்டி நிறுவனங்கள், எதிர்க் கட்சிகள், பிடிக்காத நடிகர்கள் ஆகியோரை வீழ்த்து வதற்காக, அவர்கள் மீது வதந்திகள் திட்ட மிட்டுப் பரப்படு கின்றன.

இந்த நிறுவன த்தின் பணம் முழுக்க வெளி நாடுகளு க்குச் செல்கிறது, இந்த நடிகர் நிவாரணத் துக்காக ஒரு பைசா கூடத் தர வில்லை என வரும் வதந்தி களையும் செவ்வனே பரப்பி விடுகிறோம்.

இதனால் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால், யாரோ சிலர் லாபம் அடை கின்றனர் என்பது உண்மை தானே? 

தற்போது இதன் அடுத்த கட்டமாக இணைய த்தில் உருவெடுத் திருப்பது தான் ஃபேக் நியூஸ் எனப்படும் போலிச் செய்திகள்.

உண்மை க்குப் புறம்பான செய்தி களை, நிஜமான செய்தி போன்றே சமூக வலை தளங்கள், இணைய தளங்கள் மூலமாகப் பரப்பி, மக்களை ஏமாற்றுவது தான் இவர்களின் நோக்கம்.

இதன் பின்னே வணிக ரீதியான, அரசியல்ரீதியான லாபங்களும் இருக் கின்றன. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. தற்போது கூகுள், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இவற்றை எதிர்த்து நடவடி க்கைகள் எடுத்து வருகின்றன.

இணையம் சார்ந்த பழக்க வழக்கங்கள் நம்மிடையே அதிகரித்து வரும் நிலையில், இப்படிப் பரவும் போலிச் செய்திக ளினால் நிஜ வாழக்கை யிலும் பிரச்னைகள் எதிரொலி க்கின்றன. 
உதாரண மாக ஒரு கட்சி தன்னை நல்ல விதமாகக் காட்டிக் கொள்ள வேண்டு மெனில், தங்கள் கொள்கை களை மட்டுமே பரப்ப வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

எதிர்க் கட்சிகளின் மீது இதுபோன்ற போலியான புகார் களைப் பரப்பினாலே போதும். 

அந்தக் கட்சிக்கு புனித அந்தஸ்து கிடைத்து விடும். ஒரு நிறுவனம் தன்னை விளம்பரப் படுத்திக் கொண்டு தான் சந்தையில் ஜெயிக்க வேண்டும் என்ப தில்லை.

இது போல போட்டி நிறுவன ங்களின் மீது, வீண் அவதூறு களைப் பரப்பினாலே வாடிக்கை யாளர்களை ஈர்த்து விடலாம். 

வணிகம், அரசியல், வன்மம் என வெறுப்பு களாலும், ஏதேனும் பலனை எதிர் பார்த்துமே இந்தப் போலிச் செய்திகள் உருவா கின்றன.

தற்போது ஃபேஸ்புக்கில் மட்டுமே கணக்கில் கொள்ள முடியாத அளவிற்கு போலிச் செய்தி களைப் பரப்பும் பக்கங்களும், வீடியோக் களும் பரவி வருகின்றன. 

இது போன்ற நேரங்களில் செய்திகளின் உண்மைத் தன்மைக் காக மக்கள் நம்புவது ஊடகங் களைத் தான்.

ஆனால் ஊடகங்கள் கூட, சில நேரம் இவற்றால் பாதிக்கப் பட்டு விடுகின்றன. இப்படி உருவாகும் அனைத்து செய்தி களுமே உங்கள் உணர்ச்சியை மையப் படுத்தியே உருவாக்கப் படுகின்றன. 

உங்கள் தேசபக்தி, பாரம் பர்யங்கள் மீதான் பெருமித உணர்ச்சி ஆகியவற்றைக்கொண்டுதான் இவை வலம் வருகின்றன.
முன்பு ஒரு பொருளை விற்க வேண்டு மென்றால், அதன் பெருமை களைச் சொல்லி விளம்பரம் செய்வார்கள்; 

ஒரு பிரபலத்தைக் கொண்டு விளம்பரம் செய்வார்கள்; ஆனால் இப்போது, அதற்கு அவசியமே இல்லை.

‘இந்தப் பொருளை நீங்கள் வாங்கினால், எங்கோ இருக்கும் ஒரு குழந்தை உணவு உண்ணும்’, ‘எங்கள் பொருட் களை வாங்கி, இந்தியப் பொருளா தாரத்தை உயர்த் துங்கள்;

அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணி யுங்கள்’ எனக்கூறி உங்கள் தேச பக்தியையோ, மனிதாபி மானத்தையோ லேசாக சுண்டி விட்டாலே போதும். அவர்கள் நோக்கம் நிறைவேறி விடும்.

அதே நோக்கம் தான் இந்த ஃபேக் நியூஸ் களின் பின்னேயும் இருக் கின்றன. ஒன்று உங்களை ஏமாற்ற வேண்டும்; அல்லது உங்களைப் பயன் படுத்தி லாபம் அடைய வேண்டும்.

லாபம் அடைய
எனவே, நீங்கள் வாட்ஸ் அப்பில் அல்லது ஃபேஸ்புக்கில் அனுப்பும் ஒவ்வொரு செய்தி யையும், ஒரு முறை உங்களு க்குள் சிந்தித்து விட்டே பகிருங்கள்.

தேவை யற்ற, வீண்பழி சுமத்து கின்ற, நம்பகத் தன்மையற்ற செய்திகள் உங்களை வந்து சேர்ந்தால் கூடப் பரவா யில்லை;

அடுத்த வருக்கு சேரும்படி ஷேர் செய்யாதீர்கள். இணைய உலகில் மறைந் திருக்கும் இந்தக் கண்ணி களில் இருந்து இனியாவது விடு படுவோம்!
Tags: