பெண்களை கவர்ந்து வரும் பாஹுபலி சேலை !

கோடிக்கணக்கான பாஹுபலி ரசிகைகளுள் ஒருவரான தெலுங்கு பெண் எழுத்தாளர் ரஜினி சகுந்தலா, பாஹுபலி இரண்டாம் பாகத்தை முன்னிட்டு விசேடமாக சேலை யொன்றை 
பெண்களை கவர்ந்து வரும் பாஹுபலி சேலை !
வடிவமைத்து அணிந்து கொண்டமை சமூக வலை தளங்களில் பிரசித்தமாகி வருகிறது.

பாஹுபலி இரண்டாம் பாகம் வெளியாக விருந்ததைக் கொண்டாடும் வகையில் ரஜினி மற்றும் அவரது தோழியர் சிலர், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா தோன்றும் 

ஒரு காட்சியை சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சேலையில் வடிவமைத்து, பாஹுபலி வெளியான அன்று அவற்றை அணிந்து கொண்டனர்.

முதலில், நெருங்கிய தோழியர் களுக்கிடையே வினியோகி க்கவென ஐம்பது சேலை களை மட்டுமே தயாரித்து வாங்கிக் கொண்ட ரஜினி, 

தோழியருடன் அந்தச் சேலைகளை அணிந்து கொண்டு புகைப்படம் பிடித்து அதை சமூக வலை தளங்களில் பதிவேற்றினார்.

அதைக் கண்ட பலரும் தமக்கும் அது போன்ற சேலைகளை வாங்கித் தருமாறு கேட்கவே, அடுத்து 500 சேலைகள் தயாரிக்கப் பட்டன. தற்போது, இதுவே ஒரு புதிய போக்காக மாறி, 
தெலங்கானா மற்றும் இந்தியாவின் பல பகுதி களிலும் பாஹுபலி சேலைகள் விரும்பி அணியப் பட்டு வருகின்றன. இதனால், பாஹுபலி சேலை களின் விற்பனை யும் அதிகரித்து வருகிறது.

இதற்கான காப்புரிமை எதையும் தான் வாங்க வில்லை என்று கூறும் ரஜினி, இதை ஒரு வியாபாரியாக இல்லாமல் ஒரு ரசிகை யாகவே தயாரித்து அணிந்து கொண்டேன் என்றும் கூறுகிறார்.
Tags: