ஏ.டி.எம். கார்டில் வைரஸ்... பணத்தை சுருட்டிய கும்பல் !

ஏ.டி.எம் கார்டில் ரேன்சம்வேர் தாக்குதல் ஏற்பட்டு ள்ளதாகக் கூறி சென்னையில் பொது மக்கள் ஏமாற்றப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ஏ.டி.எம். கார்டில் வைரஸ்... பணத்தை சுருட்டிய கும்பல் !
உலகம் முழுவ திலும் ரேன்சம்வேர் தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. சுமார் 150 நாடுகள் இந்த வைரஸ் தாக்குதலில் சிக்கியு ள்ளதாகக் கூறப் படுகிறது. 

இதனிடையே சென்னை மணலியை அடுத்த பழைய நாப்பாளையம், லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்த பலருக்கும் இன்று ஒரு போன் வந்துள்ளது. 'நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். 

உங்கள் ஏ.டி.எம். கார்டில் 'ரேன்சம்வேர்' என்கிற வைரல் தாக்குதல் ஏற்பட்டி ருக்கிறது, அதை அப்படியே விட்டால் அது உங்கள் உடலையும் பின் உங்கள் குடும்பத் தையும் தாக்கி விடும். 

முதலில் அதை பக்காவாக சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் கார்டு நம்பரைச் சொல்லுங்க' என மர்மநபர் ஒருவர் கேட்டுள்ளார். பயத்தில் ஆளாளுக்கு அவர்களின் ஏ.டி.எம். கார்டு நம்பரைக் கொடுத்திரு க்கிறார்கள். 

அவர்கள் நம்பரைக் கொடுத்த இருப தாவது நிமிடமே ஆன் லைனில் அவர்கள் கணக்கில் இருந்து பெரிய தொகைக்கு பொருள்கள் வாங்கப் பட்டதாக மெசேஜ் வந்திரு க்கிறது. 
இதை யடுத்து பொது மக்கள் அருகிலுள்ள மணலி புதுநகர் காவல் நிலையத் துக்கு புகார் மனுவோடு போயிருக் கிறார்கள். 

குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஓய்வில் இருப்பதால் 'மாலை ஆறு மணிக்கு மேல் வந்து அய்யாவைப் பாருங்கள்' என்று அவர்கள் திருப்பி அனுப்பப் பட்டு இருக்கி றார்கள்.
Tags: