அம்மாவோட இழப்பு என்னை ரொம்ப பாதிச்சிருச்சு - கம்பேக் கல்யாணி !

தனது எட்டு வயதில் அள்ளித்தந்த வானம' திரைப் படத்தின் மூலம் திரைப் பயணத்தை ஆரம்பித்த பூர்ணித்தா என்கிற கல்யாணி சின்னத் திரையிலும் தனக்கான முத்திரையைப் பதித்தார். 
அம்மாவோட இழப்பு என்னை ரொம்ப பாதிச்சிருச்சு - கம்பேக் கல்யாணி !
விஜய் டி.வியில் ஒளிபரப் பான 'பிரிவோம் சந்திப்போம், 'ஆண்டாள் அழகர்' தொடர் களில் நடித்தவர், ராஜ் டி.வி யில் 'பீச் கேர்ள்ஸ்' நிகழ்ச்சி யிலும் தொகுப் பாளராக இருந்தார். 

2013 ஆம் ஆண்டு மருத்துவர் ரோஹித்தை திருமணம் செய்து கொண்டவர் சிறிது காலம் சின்னத் திரைக்கு பிரேக் விட்டிருந்தார். 

தற்போது மீண்டும் ரீ என்ட்ரி யாக 'ஜீ தமிழ் ஜூனியர் சீனியர் ' நிகழ்ச்சி தொகுப்பா ளராக களம் இறங்கியிருக்கிறார்.

எப்படி இருக்கு ரீ என்ட்ரி?

நிறைய மாறியிருக்கு. ஒரு துறையில தொடர்ந்து பயணிச்சா மட்டுமே நாம நம்மளை புதுப்பிச்சுக்க முடியும்னு புரிய ஆரம்பிச் சிருக்கு. 

நான் வெள்ளித் திரைக்கு வந்த டைம்ல ஒருசில குழந்தை நட்சத்தி ரங்கள் மட்டுமே இருந் தார்கள். அதனால தான், பல பேருக்கு நான் பரிட்சயம் ஆக முடிஞ்சது. ஆனால் இப்ப அப்படி யில்ல. 

எல்லா குழந்தை களுமே எதோ ஒரு விஷய த்தில் தங்களுடைய திறமை களை வெளிக் கொண்டுட்டு வர்றாங்க. சந்தோஷமா இருக்கிற அதே நேரத்துல லைட்டா பொறாமை யாவும் இருக்கு.
ரீ என்ட்ரி யிலேயும் உங்களுக்கு வாய்ப்பு முன்ன மாதிரி இருக்கிறதா நினைக் கிறீங்களா?

''கண்டிப்பாக. எப்போதுமே திறமை சாலிகளை புறக்கணிக்க முடியாதுனு நினைக் கிறேன். அதே நேரம் நிறையப் போட்டிகளை இந்த ஃபீல்டில் பார்க்க முடியுது. 

நம்மளை நிரூபிச்சே ஆகணும்னு தள்ளப்படுற மாதிரி உணர்றேன். எனக்கும் இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைச் சிருந்தா வெள்ளித் திரையில ஒரு ரவுண்ட் வந்திருக் கலாம்னு தோணுது. 

நிறைய வாய்ப்பு களை தவற விட்டுடதா நினைக் கிறேன். ஆனாலும், ஏதோ ஒரு விதத்துல என் பேர் மக்கள் மனசுல பதிஞ்சு போற அளவுக்கு நடிச்சிருக் கேன்ங்கிற திருப்தி இருக்கு. 

'திரும்ப வந்துட்டேனு சொல்லுங்க. கல்யாணி எப்படி இருந்தாலோ அதே மாதிரி திரும்பி வந்து ட்டானு சொல்லுங்க.''

இந்த இடைப் பட்ட ஓய்வு காலத்தை எப்படி பயன் படுத்திக் கிட்டீங்க?

அதை ஓய்வுக் காலம்னு சொல்றதை விட என்னைப் புரிஞ்சுக்க எனக்குக் கிடைத்த அவகாச மாகத் தான் நினைக் கிறேன். இன்னும் சொல்லப் போனா திருமணத் துக்குப் பிறகும் ஒரு வருஷம் வேலை பார்த்தேன். 

அதற்குப் பிறகான வருடங் களில் என்னை ஃபிட்டாக வைத்திருக்க முயற்சிப் பண்ணிட்டே இருந்தேன். இடையில என்னுடைய முதுகெலும்பா இருந்த என் அம்மாவோட இழப்பு என்னை ரொம்ப பாதிச்சிருச்சு. 
அம்மாவோட இழப்பு என்னை ரொம்ப பாதிச்சிருச்சு - கம்பேக் கல்யாணி !
அதுல இருந்து மீண்டு வர ரொம்ப கஷ்டப் பட்டேன். அதுபோக எனக்கு நடந்த சின்ன அறுவை சிகிச்சை எல்லாம் என்னை இந்த ஃபீல்டுல இருந்து தள்ளி வைச்சிருந்தது. இப்ப பெர்ஃபக்ட்.''

''நீங்கள் வீட்டில் ரொம்ப அமைதி யான பொண்ணுனு கேள்விப் பட்டோமே?''

''யாரோ உங்ககிட்ட பொய் சொல்லியி ருக்காங்க. இப்பவே பாருங்க எவ்வளவு பேசுறேன். வீட்லயும் அப்படித் தான். என்னை எல்லாம் வச்சுக்கிட்டு சமாளி க்கிறது அவ்வளவு ஈஸியில்ல. என் கணவர் தான் திண்டாடுறார். 

ரொம்ப அமைதி யான அவரை வெளியக் கூட்டிட்டுப் போகச்சொல்லி டார்ச்சர் கொடுத்துட்டே இருப்பேன். நாங்க பெங்களூருல செட்டில் ஆகிட்டோம். 

என்னைச் சமாளிக்க எப்படி யாவது வாரத்துல ரெண்டு நாள் வெளியில கூட்டிட்டுப் போயிடுவார். அப்படியி ல்லையா கார்ல ஒரு லாங் டிரைவ் போயி டுவோம். பைக்னா எனக்கு அலர்ஜி.''

ஏன் டூவிலர்ல பயணம் செய்றது உங்களுக்குப் பிடிக்காதா?

ஆமா...சைக்கிள் ஓட்டத் தெரியாத நான் சீரியலுக் காக ஒரு தடவை ரொம்ப மோசமா ஓட்டினேன். அதுக்குப் பிறகு டூவீலர் எப்பவும் யூஸ் பண்ணினது கிடையாது. 

என் அப்பா ஒரு முறை பைக்கில் போகும் போது பெரிய விபத்தில் மாட்டிக் கிட்டார். அந்த பயத்தி னாலேயே எனக்கு சைக்கிள் கூட ஓட்டக் கத்துக் கொடுக்கல.''

''எதிர் பார்த்த வாய்ப்பு வராமல் போறதுக் காக தற்கொலை க்கு முயலும் நடிகைகள் பத்தி?''

''எனக்கே அந்த மாதிரி மன அழுத்தம் வந்திருக் குங்க. வீட்ல இருக்கும் போது டி.வி பார்ப்பேன். அப்போ நடிக்கிற நடிகை களைப் பார்க்கும் போது எனக்குக் கஷ்டமா இருக்கும். 
இவங்க எல்லாம் நடிக்கிறா ங்களே.. நம்மளால நடிக்க முடி யலையே. இனிமே இப்படித் தானானு பல நேரங்களில் புலம்பி யிருக்கேன். கொஞ்ச நேரம் கழித்து, 'ஏன் இப்படி நினைக் கிறோம். 

இதனால ஒண்ணும் வாழ்க்கை முடிஞ்சுப் போயிடலேயே. அடுத்து வாய்ப்பு கிடைக்கும் போது நம்மளை நிரூபிக்க முடியும்னு என்னை நானே சமாதானப் படுத்திப்பேன். 

என்கூட இருக்கவ ங்களும் எனக்கு ஆதரவா இருந்தாங்க. அதுதான் என்னை எப்பவும் நிம்மதி யாக வைத் திருந்தது. 

நடிப்புத் துறையில இருக்கிறவங் களுக்கு எனக்குக் கிடைச்ச மாதிரி ஆறுதல் கிடைக்காம தற்கொலை முடிவுக்கு போயிடு றாங்க. அவங்களு க்கான கவுன்சிலிங் கையும் கூடிய விரைவில் ஆரம்பிக்கப் போகிறேன்.''

அப்படியா...  எந்த மாதிரி யான கவுன்சிலிங் இது?

''எனக்கு நெருக்க மான சபர்ணா, சாய் என மூன்று க்கும் மேற்பட்ட நண்பர்கள் தற்கொலை செய்து கிட்டாங்க. சபர்ணா இறந்த போது என்னால ரெண்டு நாள் வீட்டை விட்டு வெளிய வர முடியல. 

சபர்ணாவு க்கு தான் உடல் பருமனோடு இருக்கிற தால தான் வாய்ப்புக் கிடைக் கலனு நினைச்சு எடை குறைப்பும் பண்ணிப் பார்த்தா. 

ஆனா, அதற்குப் பிறகும் வாய்ப்பு கிடைக்கல. அது தந்த மனஅழுத்த தால தான் தற்கொலை முடிவுக்குப் போயிட்டா. 

சபர்ணா ஷூட்டிங் ஸ்பாட்டு க்கு வந்துட்டா அவ்வளவு கலகலனு இருக்கும். அப்படிப் பட்டவளு க்கு இப்படி ஒரு முடிவானு நினைக்கும் போதே கஷ்டமா இருக்கும். 
அம்மாவோட இழப்பு என்னை ரொம்ப பாதிச்சிருச்சு - கம்பேக் கல்யாணி !
அதனால தான் முறையா கவுன்சிலிங் கோர்ஸ் முடிச்சிட்டு சின்னத் திரையில் இருப்பவர் களுக்கு கவுன்சிலிங் கொடுக் கலாம் நினைக் கிறேன். 

சின்னத் திரையில இருக்கிற வங்க தின தேவைக்கு கூட கஷ்டப்படுற நிலைமை இருக்குது. 

அதைத் தடுக்க முதல்ல மனதிடம் வேணும். அதைதான் கவுன்சிலிங் மூலமா ஈடு கட்டப் போறோம்'' என்பவர் கூடவே புரடக்‌ஷ னிலும் விரைவில் இறங்கப் போகிறாராம்.’’

சீரியல்ல மறு படியும் களமிறங்கப் போகிறீர்களா?

'இதுவரை மூன்று தொடர்களு க்கான வாய்ப்புகள் வந்தது. ஒரு சீரியலுக்கு நெகட்டிவ் ரோலில் நடிக்கக் கூப்பிட்டா ர்கள். 

மற்ற இரண்டு சீரியல் களிலும் என் திறமையை வெளிப் படுத்தும் அளவுக்கு வாய்ப்பு கள் கிடைக் காதது போல தோன்றிய தால் இன்னும் எதையும் முடிவு செய்ய வில்லை. 

கூடிய விரைவில் என்னை சீரியலிலும் பார்க்கலாம். டோன்ட் மிஸ் இட்'' என்கிறார் கல்யாணி ஸ்மைலி களை உதிர்த்த படியே...
Tags:
Privacy and cookie settings