வீர சாகசம் செய்தவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது !

துணிச்சலான மற்றும் வீர சாகசச்செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப் பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீர சாகசம் செய்தவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது !
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சரால், 

சுதந்திரதின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் இந்த விருதில் அடங்கும். 

துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த தமிழக த்தைச் சேர்ந்த பெண் விண்ணப்ப தாரர் மட்டுமே இவ்விரு தினைப் பெறத்தகுதி யுள்ளவர்.

2017ஆம் ஆண்டு வழங்கப் படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள், விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் 
மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் அரசு முதன்மைச் செயலாளர் பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு வருகிற 30.06.2017-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்ப ட வேண்டும். 

விருது பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப் படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings