டாஸ்மாக் இல்லாத நகராக மாறிய கும்பகோணம் !

நெடுஞ்சாலையில் உள்ள மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, டாஸ்மாக்கே இல்லாத ஊராக கும்பகோணம் மாறியுள்ளது.
டாஸ்மாக் இல்லாத நகராக மாறிய கும்பகோணம் !
நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மூலம் ஏராளமான விபத்து ஏற்படுவதால், அந்த கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என பாமக தரப்பில் உச்ச நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப் பட்டது. 

எனவே, அந்த கடைகளை மூட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதற்கு அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அவகாசம் அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

எனவே, தமிழக த்தின் அனைத்து மாநிலங் களிலும் உள்ள 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. இதில் கும்பகோணத்தில் மட்டும் 23 கடைகள் மூடப்பட்டன. 

கோவில் நகரம் என அழைக்கப்பட்ட கும்பகோணத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால், வெளிமாநிலங்கள் 
மற்றும் வெளிநாடு களில் இருந்து வரும் சுற்றுப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், அந்த ஊரில் செயல்பட்டு வந்த 23 கடைகளும் மூடப் பட்டதால், டாஸ்மாக்கே இல்லாத நகரம் என்ற சிறப்பை தற்போது பெற்றுள்ளது.
Tags: