கர்ப்பப்பையில் கட்டிகள் பரிசோதித்துக் கொள்வதே சிறந்தது !

பொதுவாக நிறைய பெண்களுக்கு முப்பத்தைந்து வயதிற்கு மேல் கர்ப்பப்பையில் கட்டிகள் தோன்றுகின்றன. முப்பத்தைந்து வயதிற்கு மேல் உள்ள நாறு பெண்களைச் சோதனை செய்து 
பார்த்தால் அதில் எண்பது சதம் பெண்களுக்குக் கருப்பையில் கட்டிகள் இருக்கும். 

இக் கட்டிகளில் இரு வகை உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்திற்கு அறிகுறியாகத் தோன்றும் கட்டிகள் (fibromes). அடுத்தது கேன்சர் கட்டிகள்.

முதலில் கர்பப்பையில் வரும் சாதாரணக் கட்டிகளைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கர்பப்பைக் கட்டிகளால் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை. 
இந்தக் கட்டிகள் பிற்காலத்தில் கேன்சராகவும் மாறாது என்பது மனத்திற்கு ஆறுதல் தான். இக்கட்டிகள் வந்ததற்கான அறிகுறிகள் என்னவென்றால் உடலும் முகமும் ஊதி விடும்.

ஒரு சிலருக்கு இக்கட்டிகள் இருந்தாலும் இந்த பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. அவர்கள் கட்டியிருந்தாலும் எப்பொழுதும் போலவே இருப்பார்கள். 
ஆனால் மேற் சொன்ன அறிகுறிகள் இருப்பவர்களுக்கு அக்கட்டிகளை அறுவை சிகிட்சை செய்து அகற்றி விடவே மருத்துவர்கள் ஆலோசனைத் தருகிறார்கள். 

மற்றபடி அந்தக் கட்டிகளைப் போக்க எந்த மருந்தும் இல்லை. சாதாரண வலி நிவாரணி மருந்துக்களைத் தான் மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். 

அந்த மருந்துகளால் அந்த நேரத்தில் அறுதலே தவிர முழு நிவாரணம் கிடைக்காது.

அப்படிக் கட்டியிருந்து அறுவை சிகிட்சை மேற்கொண்டு கட்டிகளை எடுத்து விட முடிவு செய்தால் அவசியமாக கர்பப்பையை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு அறுவை சிகிட்சைக்கு ஒப்புக் கொள்வது நல்லது. 

காரணம், கருப்பையில் உள்ள கட்டிகளை மட்டும் எடுத் துவிட்டு கருப்பையை எடுக்காமலேயும் விட்டு விடலாம்.

ஆனால் சில நேரங்களில் கட்டிகளால் கருப்பையும் அழற்சிக்குள்ளாகி விடுகிறது. அப்படி கருப்பை வீணாகி விட்டிருந்தால் கருப்பையையும் எடுத்து விடுவது நல்லது.

ஏன் ஸ்கேன் பார்க்க வேண்டும் என்றால் சாதாரண எக்கோ கிராபியில் கருபப்பை அழற்ச்சி தெரியாது. 

அப்படி கவனிக்காமல் கட்டியை மட்டும் எடுத்து விட்டு கருப்பையை விட்டு விட்டால் மீண்டும் கட்டிகள் தோன்ற வாய்ப்பும் உள்ளது. 
அழற்சியான கருபப்பையால் வலியும் முழுமையாகப் போகாது. ஸ்கேன் பார்த்து கருபப்பை நன்றாக இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரிந்தால் கட்டியை மட்டும் அறுவை சிகிட்சையின் மூலம் எடுத்து விடலாம்.

தவிர... கருப்பையில் கேன்சர் கட்டிகள் இருந்தால் எந்த வித தாமதமும் இன்றி உடனடியாக அறுவை சிகிட்சை மூலம் கருபப்பையை எடுத்து விடுவதே உயிருக்கு ஆபத்தில்லாம் இருக்கலாம். 

கருப்பப்பையில் மட்டுமல்லாமல் பெண்களின் வயிற்றில் மற்ற இடத்திலும் இக்கட்டிகள் தோன்றுகிறது. இதனால் பெரிய பாதிப்பு எதுவும் வருவதில்லை.
இக்கட்டிகள் வரக்காரணம்... பெண்களுக்குப் பலமுறை கருச்சிதைவு செய்திருந்தால் இந்தப் பிரட்சனைகள் வரலாம். ஆனால் இதை மட்டும் காரணம் என்றும் சொல்ல முடியாது. 

கல்யாணமே செய்துக் கொள்ளாமல் தனிமையில் இருக்கும் சில பெண்களுக்கும் இந்தக் கருப்பைக் கட்டிகள் தோன்றியிருக்கிறது. 

அதனால் இக்கட்டிகள் வர சரியான காரணத்தைச் சொல்ல முடிவதில்லை.
இந்தப் பிரட்சனைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் தங்களின் முப்பது வயதிற்கு மேல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அவசியம் மருத்துவரிடம் சென்று தன்னைப் பரிசோதித்துக் கொள்வதே சாலச்சிறந்தது.
Tags: