என்ஜினியரிடம் கேப் டிரைவர் உறவு கொள்ளுமாறு தொல்லை !

பெங்களூரில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் என்ஜினியரான பூஜாவிடம் கேப் டிரைவர் தன்னுடன் உறவு கொள்ளுமாறு கூறி தொல்லை கொடுத்துள்ளார். 
என்ஜினியரிடம் கேப் டிரைவர் உறவு கொள்ளுமாறு தொல்லை !
பெங்களூரில் உள்ள சந்திரா லேஅவுட்டில் வசித்து வருபவர் 24 வயது பூஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாப்ட்வேர் என்ஜினியரான அவர் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிகிறார். 
அவரது அலுவலகம் மகாதேவபுராவில் உள்ள பாக்மானே பிசினஸ் பார்க்கில் உள்ளது. கடந்த புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு அவரை பணிக்கு அழைத்துச் செல்ல அலுவலகம் அனுப்பிய கேப் வந்தது. 

கேபை சந்தோஷ் சோமேகவுடா என்பவர் ஓட்டினார். பூஜா முதன்முதலாக சந்தோஷின் கேபில் சென்றுள்ளார். 

அலுவலகத்திற்கு செல்லும் வழியில் சந்தோஷ் பூஜாவை தன்னுடன் உறவு கொள்ளுமாறு வலியுறுத்தி யுள்ளார், மேலும் நான் உன்னை காதலிக்கிறேன், 
நான் உன்னிடம் கூறியதை அலுவலக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். 
சப்தம் போட்டால் சந்தோஷ் ஏதாவது விபரீதத்தில் ஈடுபடுவாரோ என்று பயந்த பூஜா அலுவலகத்தை சென்றடையும் வரை அமைதியாக இருந்துள்ளார்.

அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் நடந்தது பற்றி தெரிவிக்க அவர்கள் சந்தோஷை பணிநீக்கம் செய்தனர். 

சந்தோஷ் வேலை போன கோபத்தில் ஏதாவது செய்வாரோ என்று அஞ்சிய பூஜா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்தனர். 

இது குறித்து பூஜா கூறுகையில், முதலில் வேலை பற்றி கேட்ட சந்தோஷ் பின்னர் எனக்கு காதலர் இருக்கிறாரா என்று கேட்டார். நான் பதில் அளிக்காமல் இருந்தேன். 
உடனே அவர் மேடம் யாராவது ஒரு ஆண் குடிபோதையில் உங்களுடன் விருப்பத்திற்கு மாறாக உறவு கொண்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். 
நான் உங்களுடன் உறவு கொள்ள விரும்புகிறேன். என்னை திருமணம் எல்லாம் செய்ய வேண்டாம். என்னுடன் ஜாலியாக இருந்தால் போதும். 

ஆணுறை அணிந்து கொள்கிறேன் என்றார். வீட்டில் தனியாக இருக்கையில் என்னை அழையுங்கள் என்று கூறினார் என்றார்.
Tags: