பள்ளிவாசல் தீப்பிடித்த சம்பவத்திற்கு பிரதமர் வருத்தம் !

கனடா ஒண்டோரியோவின் பீட்டர்பொறோ (Peterborough) பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் 
குறித்து தாம் வருத்தம் கொண்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ கூறியதாவது:

அந்த தாக்குதல் சம்பவத்தை வெறுப்புத் தன்மை மிக்ககுற்றச் செயல் எனவும், அந்த குற்றச் செயலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், 

சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு அனைத்து வித நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் என கனேடிய முஸ்லிம்களுக்கு பிரதமர் உறுதியளித் துள்ளார்.
Tags: