தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது !

தேனின் மருத்துவகுணம். உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள் (என்றும்),
தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது !
பின், நீ எல்லா விதமான கனிகளின் மலர்களி லிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக கினான்). 

அதன் வயிற்றி லிருந்து பலவித நிறங்களை யுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித் துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

அல்குர்ஆன் 16:68-69

இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தி யாகின்றது என்ற உண்மை கூறப் படுகிறது. பெரும் பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்க வில்லை.

தேனீக்கள் மலர்களி லிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக் கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர். உண்மை என்ன வென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன.
உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்ற மடைந்து, அதன் வயிற்றி லிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கி ன்றார்கள். 

தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறை யினரும் ஒப்புக் கொள் கின்றனா. இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்து கின்ற வசனமாகும்
Tags: