வாயில் வாழும் பாக்டீரியாக்கள் !

நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரி யாக்கள் உயிர் வாழ்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? 
வாயில் வாழும் பாக்டீரியாக்கள் !
நமது உடலில் உள்ள பாக்டீரி யாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப் போல் பத்து மடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா? ஆம். அது தான் உண்மை.

உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொரு பகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்று போல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது.
உலகம் முழுவதிலு மிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப் பட்டுள்ளது. 

மனிதனின் சிறு குடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இது வரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.

இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக் களைப் பற்றி ஆய்வாளர் களின் கவனம் திரும்பி யிருக்கிறது. நோய்களின் நுழைவுப் பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெர்மனியின் மாக்ஸ்ப்ளங்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டாக்டர் மார்க் ஸ்டோன்கிங் என்பவரும் அவரது குழுவினரும் உலகம் முழுவதிலும் இருந்து உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து வகைப்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர்.
 வாயில் வாழும் பாக்டீரியாக்கள் !
ஆரோக்கி யமான 120 நபர்கள் புவிப்பரப்பின் ஆறு வேறுபட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக் கப்பட்டு அவர்களிட மிருந்து உமிழ்நீர் மாதிரிகள் திரட்டப் பட்டன.

செல்லின் முக்கியமான பகுதிப்பொருளாகிய ரிபோசோம்களில் உள்ள 16S rRNA ஜீன்களில் புதைந்துள்ள ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வுகளை ஸ்டோன்கிங் குழுவினர் தற்போது நடத்தி வருகின்றனர்.
வாயில் வாழும் பாக்டீரியாக் களிடையே உள்ள வேறுபாடு  களையும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது.

உணவு, கலாச்சாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய வாயில் வாழும் பாக்டீரியாக் களிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார்.
வாயில் வாழும் பாக்டீரியாக்கள் !
உமிழ் நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்க வைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கிறார்கள் என்பதும் 

அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்வது முக்கிய மில்லையா?
நம்முடைய பிள்ளைகள் கைசுத்த மாகவும், வாய்சுத்த மாகவும் வாழ வேண்டியது அதைவிட முக்கிய மில்லையா?
Tags: