கதிகலங்கிய கருணாநிதி - சன்குழுமம் !

0
இப்படியாக எவ்வளவு வில்லங்கங்கள் செய்து வியாபாரத்தை விரிவு படுத்திய போதும் கருணாநிதி கண்டு கொண்டா ரில்லை.


உலகப் பெரும் பணக்காரரான பில்கேட்ஸை தமிழகம் அழைத்து வந்து கலாநிதி வீட்டில் விருந்துண்ண வைத்தார் தயாநிதி.

ரிலையன்ஸ் குழுமத்துடன் நெருங்கிச் சென்று வியாபார பரிவர்தனை களை விருப்பம் போல் ஏற்படுத்திக் கொண்டார்.

பரம்பரை பணக்காரான ரத்தன் டாட்டாவிடம் வியாபார உறவு வேண்டி நிர்பந்தித்த போது, ' இது வில்லங்க கூட்டம்' என அவர் விலகிச் சென்றார்.

'விட்டேனா பார் உன்னை' என தயாநிதி தடாலடியாக ரத்தன் டாட்டாவை
சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய - சன்குழுமம் !
மிரட்டிய போது கூட, கருணநிதி, பேரனை அழைத்து கண்டித்த தாகச் செய்தி இல்லை.

கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் களை, மற்ற அமைச்சர் களை கடுகளவும் மதிக்காமல்,

தானடித்த மூப்பாக தயாநிதி டெல்லியில் வலம் வந்த போதும் கருணாநிதி இதை யெல்லாம் கவனித்தாக காட்டிக் கொள்ள வில்லை.


எல்லா வற்றுக்கும் மேலாக திராவிடஇயக்கச் சித்தாந் தங்களுக்கு எதிரான, பழைமை வாத,

மூடநம்ப்பிக் கையை பரப்பும் பத்தாம் பசலித் தனமான கருத்துகளை மீட்ருவாக்கம் செய்வதில்

சன் தொலை காட்சி சளைக்காமல் சாதனை புரிந்த போதும், கருணாநிதி வேதனை கொண்டா வராகக் தன்னை வெளிக் காட்ட வில்லை.

கூட்டணி கட்சிகளுக் கிடையே குளறுபடி உருவாக்கும் செய்திகளை பரப்பிய போதும் கருணாநிதி கோபப்பட்டு எழுந்தா ரில்லை.
சன் டிவியின் சமூக சேவை - சன்குழுமம் !
ஆனால், 'தனக்கு பிறகு கட்சித் தலைமையைக் கைப்பற்ற கணக்கு போட்டு விட்டனர்' என அறிய வந்த போது தான் கதிகலங்கிப் போனார்.

கட்சியையும், ஆட்சியையும் கபளிகரம் செய்யத் துடிப்பவர் களை வெட்டி விடுவது தான் விவேகம் என வேகமாக முடிவெடுத்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)