மூல நோய் என்றால் என்ன? அதற்கான காரணம் என்ன?

0

நம் உடலில் அசுத்த இரத்தத்தை கொண்டு செல்லும் சிறை ரத்த குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன. மூல நோய் என்றால் என்ன? அதற்கான காரணம் என்ன?

இந்த வால்வுகள் தான் சிரை குழாய்களில் இரத்தம் தேவை இல்லாமல் தடுக்கின்றன. 

ஆனால் நமது உடலின் அமைப்பின்படி ஆசனவாயில்👈 இருந்து மலக்குடலுக்கு செல்லும் சிரை குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இல்லை. 

இதனால் புவி ஈர்ப்பு விசை காரணமாக சாதாரணமாகவே அங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும் .
இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த இரத்த அழுத்தம் சிறிது அதிகமானால் கூட அவற்றில் இரத்தம் தேங்கி சிறிய பலூன் மாதிரி வீங்கிடும். இந்த இரத்த குழாய் வீக்கத்தை தான் ‘மூல நோய்‘ என்கிறோம்.

மூல நோய் வருவதற்கான காரணம்

இதற்கு முக்கிய காரணம் மலச்சிக்கல்👈, நம் உடலில் இருந்து மலத்தை வெளியேற்ற முக்கி அழுத்தத்தை கொடுப்பதனால் ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயை உண்டாக்கும். 

ஆண்களிடம் காணப்படும் சிறுநீர் குழாய் அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் ஆகியவற்றாலும் மூல நோய்👈 உண்டாகும்.

வெளி மூலம், உள் மூலம்

மூல நோய் என்றால் என்ன? அதற்கான காரணம் என்ன?

வெளி மூலம், உள் மூலம் என இரண்டு வகையான மூல நோய்கள் உள்ளன. வெளி மூலம் வெளிப்புறத்தில் தோன்றுவது. ஆசன வாயின்👈 உள்ளே தோன்றுவது உள் மூலம். 
குதிகால் வெடிப்பு வந்து விட்டதா? சில டிப்ஸ் !

மூலத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதனை சுலபமாக சரி செய்து விடலாம்.

மூல நோய்க்கு சித்த மருந்து

தேற்றான் கொட்டை லேகியம், கருணைக்கிழங்கு லேகியம் ஆகியவை மூல நோய்க்கு சிறந்த சித்த மருத்துவமாகும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிகப் படியான காரம், உப்பு, புளி மசாலா உணவுகள். மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவு முறைகள்

சேனைக்கிழங்கு அதிகளவில் சேர்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு, ஓட்ஸ், கோதுமை, பேரிக்காய், தவிடு, கேரட் போன்றவை 25 முதல் 30 கிராம் வரை சாப்பிட வேண்டும்.
பெண்களை மிரட்டும் ஆட்கொல்லி நோய் !

6 முதல் 7 தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். கொத்தமல்லி நீர் அருந்தலாம். இஞ்சி, புதினா, நார்த்தை, எலுமிச்சையுடன் தேன் சேர்த்து அருந்தலாம்.

பப்பாளி, மாக்கொண்டை, எள், பாவைக்காய், முள்ளங்கி, உள்ளி (சின்ன வெங்காயம்) உணவில் அதிகம் சேர்க்கலாம். .வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடலாம். 

தீர்வுகள்

மூல நோய் என்றால் என்ன? அதற்கான காரணம் என்ன?
முள்ளங்கி ஜூஸ்👈 பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகி விடும். 

அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகி விடும்.

மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகி விடும்.

தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால், உடலில் வறட்சி👈 குறைந்து, பைல்ஸ் சரியாகி விடும்.

உடலுக்கு ஆபத்தை தரும் அழகு சாதன பொருட்கள் !
அத்திப்பழம் அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, 
மூல நோய் என்றால் என்ன? அதற்கான காரணம் என்ன?
காலையில் எழுந்ததும் பாதியை குடித்து விட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகி விடும். 

வெங்காயம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரி செய்து விடலாம். அது மட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)