ஆசனவாய் மூல நோய்க்கான மருந்துகள் !

வருடத்துக்கு இரு முறை வந்து போகும் சாதாரண ஒரு நோய் மூலம். இருசக்கர வாகனங்களுக்குக் கூட தினசரி பெட்ரோல், இன்ஜின் ஆயில், டயருக்கு காற்று என பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்ளும் நாம்,
ஆசனவாய் மூல நோய்க்கான மருந்துகள் !
உடலுக்கு தேவையான தண்ணீர், காய்கறி, பழங்களுடன் கூடிய உணவு, உடற் பயிற்சி, நல்ல உறக்கம் எனத்தர மறுப்பதன் விளைவே 70 சதவிகித மூலநோயின் காரணம்.

எனது 20 வருட அனுபவத்தில், நோயாளிக ளிடமிருந்து தெரிந்து கொண்டது என்ன தெரியுமா? ஒரு நவீன மருத்துவர் ஒரு நோய்க்கான காரணத்தை உடல் அமைப்பைப் பற்றிய பாதிக்கப்பட்ட உறுப்பு, படங்களுடன் நோய் எதனால் வருகிறது, 

உறுப்பின் மீதும் உடலின் மீதும் அதனுடைய தாக்கம் என்ன என எடுத்துக் கூறி னாலும், நோயைப் பொறுத்த மட்டில் பாட்டி சொன்ன தையும், பெற்றோர் சொன்ன தையும்,

பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதையும், ஏற்கனவே நோயினால் அவதிப் பட்டவர்கள் சொன்னதையும் தான் படித்தவர்கள் கூட எடுத்துக் கொள்கிறார்கள்... 

நம்புகிறார்கள்... உன்னையே நீ அறிவாய் என்று சாமி யார்கள் கூறுவதைக் கூட ஏற்றுக் கொள் வார்களே அன்றி, நவீன மருத்து வர்கள் கூறுவதை ஏற்றுக் கொள் வதும் இல்லை... நம்புவதும் இல்லை.
மருத்து வரின் அறை வாயி லிலேயே அதை மறந்து விடு பவர்கள் உண்டு. நோய் குணமான உடனே அதை மறந்து விடு பவர்களும் உண்டு. நவீன மருத்து வர்கள் கூறும் உடற் பயிற்சியை யும் செய்வ தில்லை. 

நோயாளிக்கே தெரிந்த பரிசோதனை களை (Test) எடுப்பதை விட, உடற்பயிற்சி ஒரு மருந்தா கவே செயல் படும் என்பதையும் ஏற்றுக் கொள்வ தில்லை. 

அன்றாட உணவில் ஒரு காய், ஒரு பழம், 2 லிட்டர் தண்ணீர். இந்த சமச்சீரான உணவு உடலுக்கு வைட்டமின் களையும் நார்ச்சத் தையும் தரும். வயிற்றை நிரப்பி கலோரி களை குறைக்கும். 

திட உணவுடன் அது 8 மீட்டர் உணவுக் குழாயில் நீருடன் பயணம் செய்து, பல்வேறு சத்துகளை உடலுக்கு வழங்கி, காலையில் மலச் சிக்கல் சிரமம் இன்றி உடலை விட்டு வெளி யேறுகிறது.
மலச் சிக்கல் ஆசன வாயை அழுத்தி, அங்கிருக்கும் ரத்தக்கு ழாய்களை கிழித்து, மூலம் என்ற நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது. 

காய், கனி, நீர் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தால் டயட்டீஷியன், நியூட்ரீஷியனிஸ்ட் எனப் பார்க்க அவசியமில்லை. 

ஆண்டுக்கு இரு முறை கோடையில் தண்ணீர் குடித்தாலும் - போது மானதாக இல்லாமல், மழைக்காலத்தில் தண்ணீரே குடிக்காமல் போது மானதாக இல்லாததால், 

மலச்சிக்கல் அவதி வருகிறது என்ற நவீன மருத்துவரின் ஆலோசனையையும் கேட்காமல், யாரிடமோ தஞ்சமடைகிறார்கள்.

மூலத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மேலே கூறிய காய், பழம், தண்ணீர் தேவையான அளவுக்கு உட்கொள் ளாததே பிரதான காரணம். உடற் பயிற்சியின்மை, 

அதிகமாக உட்கார்ந் திருப்பது (தையல் மெஷின், சைக்கிள் ஓட்டுவது) போன்ற வையும், பருமன், தீவிர ஓயாத இருமல், மகப்பேறு போன்ற வையும் காரணங் களாகலாம்.
மனித னுடைய மலக்குழாய் 3-4 நாட்களு க்கான மலத்துடன், விரி வடைந்து தேக்கி வைக்கும் சக்தி உடையது. ஆனால், ஆசனவாய் மிகச் சிறிய அளவில் தான் விரியும். 

உடலில் தண்ணீர் இல்லாத பட்சத்தில் மலக் குழாயில் இருந்தும் உடலுக்கு தேவை யான தண்ணீரை உறிஞ்சி விடுவதால், மலம் மேலும் இறுகி, மலக் குழாய் சுவர்களை, ஆசன வாயை அழுத்தி காயப் படுத்தி, 

வெளியே தள்ளிக் கொண்டோ, கிழித்து விட்டோ வருவதால் ரத்தப் போக்குடனோ, இல்லா மலோ உள் மூலமா கவோ, வெளி மூல மாகவோ மூல நோய் உருவா கிறது.

மூலநோயின் அறிகுறிகளாக ஆசனவாயின் வீக்கம், மலக்குழாயில் வலி, ரத்தப் போக்கு சீழ்கட்டி, ஜுரம், மலக்குழாய் வெளியே தொங்கும் அளவுக்கு நடக்க முடியாமல் போவது போன்றவை இருக்கக் கூடும். 
ஆசனவாய் மூல நோய்க்கான மருந்துகள் !
மலக் குழாயின் முடிவிலிருக்கும் ஆசன வாயில் நல்ல ரத்தம், கெட்ட ரத்தம் என்றில்லாமல் - இரண்டும் இணைந்த மிக அதிகமான ரத்தக் குழாய்க ளுடன், தசைகளும் சதையும் இருக்கும். 

இவை ஆசன வாய்க்கே உரிய தனித்து வமான ரத்தக் குழாய்கள். மலத்தை அடக்கு வதற்கு வெளி மற்றும் உள் தசை வளையம் (Anal sphincter muscle) இருக்கி ன்றன. 

மூல நோய்க்கு மருத்துவ பரிசோதனை என்பது மருத்து வரே பார்த்து (Rectal Exam) கட்டிகள், சீழ் கட்டிகள் போன்றவை இல்லை என்றபின் (Rectoscopy) மூலம் அறியப்படும். சில வேளை களில் MRI வரை தேவைப் படலாம். 

மலத் துடன் ரத்தம் வரும் போது அது மலக் குழாய் கிழிந்து (Anal Fissure) வருகிறதா, சீழ்கட்டி (Fistula), கேன்சர் கட்டிகள் என மற்ற நோய்களி லிருந்து வித்தியாசப் படுகின்ற னவா எனப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூல நோய்க்கு ஆரம்பத் திலேயே கூறியபடி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு காய், ஒரு பழம், 2 லிட்டர் தண்ணீர் முக்கியம்.

வீட்டு கைப்பக்குவ குழம்புகளை ஹோட்டல் குழம்பு களைப் போல செய்வதே, குழந்தை களுக்கு இரைப்பை வலி, மலச்சிக் கலுக்கான காரணம். 

இதை எப்படி படித்த மற்றும் படிக்காத தாய் மார்களு க்கு புரிய வைப்பது என்று நவீன மருத்துவர் களுக்கு தெரிய வில்லை.
நோயின் ஆரம்பத்தில் உணவு தவிர, மலக் குழாயின் வலியைப் போக்க, வீக்கத்தைப் போக்க, சாதாரண கிருமி நாசினிகள், உறைந்த ரத்தம் கரைக்கும் மருந்துகள் தவிர 

ஆசன வாயில் தடவும் ஆயின் மென்டுகள், க்ரீம்கள் மற்றும் வீக்கத்தைப் போக்கும் சுடுநீர் ஒத்தடம் போன்றவை உதவி செய்கின்றன. 

நோயாளி யின் ஒத்துழை ப்புடன் நோயின் காரணம் தெரிந்து போக் கினால் மேலே கண்ட வாறு மருந்தா லேயே குணப் படுத்த முடியும். அறுவை சிகிச்சை யாக மாற்றாமல் குணப் படுத்த முடியும்.
ஆசனவாய் மூல நோய்க்கான மருந்துகள் !
அறுவை சிகிச்சை யாக முற்றிய பின்பு ரப்பர் பேண்ட் இறுக் கிகள் (Rubber band ligation), ரத்தக் குழாயை அடைத்து போகச் செய்வது (Sclerotherapy) அல்லது 

லேசர் இன்ப்ளான்ட் (Infrared radiation, laser surgery), க்ரையோ சர்ஜரி (Cryosurgery), எெலக்ட்ரோ (Electrocautery) மூலம் ரத்த மின்றி அறுத்து எடுக்கலாம். கத்தி கொண்டும் அறுத்து எடுக்கலாம். 

உணவுக் குழாயை அறிந்தவர் களுக்கு, சமச்சீர் உணவில் நார்ச்சத்தின் முக்கியத்துவம் அறிந்தவர் களுக்கு, உடலுக்கு உணவைத் தவிர நீரும் மிக முக்கியம் என 

அறிந்தவர் களுக்கு மூலநோய் என்றால் என்ன என்பதே தெரியாது என்பதே சத்தியமான உண்மை!

மூலத்துக்கு பல்வேறு காரண ங்கள் இருந் தாலும் காய், பழம், தண்ணீர் தேவை யான அளவு க்கு உட்கொள் ளாததே பிரதான காரணம்.. டாக்டர் மு. அருணாச்சலம்.
Tags: