அம்மாவிற்காக அதிமுகவுக்கு ஆதரவு - ஜெ.தீபா !

0
மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை ஆதரவளிப்ப தாக ஜெ.தீபா தெரிவித்திருக் கிறார். நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதி களுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகக் கடந்த 16ம் தேதியன்று தீபா கூறினார். 
அம்மாவிற்காக அதிமுகவுக்கு ஆதரவு


தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 40 தொகுதி களிலும் தனித்துப் போட்டி யிடுவதாகக் கூறி, வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதனால், பெரும் எதிர் பார்ப்பு எழுந்தது.

ஆனால், இப்போது தேர்தலில் போட்டியிடவில்லை, அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அந்தர்பல்டி அடித்துள்ளார். மேலும், அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள், நிர்வாகிகள் பாடுபடுவர். 

அதிமுக தலைமை யிலிருந்து அழைப்பு வந்தால் பிரசாரம் மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளார். அதிமுகவின் எதிர்கால நலன் மட்டுமே முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings