பெப்சி, கோககோலாவில் நச்சு பொருள் கலந்துள்ளது?

பெப்சி கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப் படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. 
பெப்சி, கோககோலாவில் நச்சு பொருள் கலந்துள்ளது?
இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர் பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றி யமைக்கப்பட்டு புதிய கலாசாரமய மாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது.

ஆனால் இந்தப் பானங்களால் ஏற்படக் கூடிய விளைவு களை சுட்டிக் காட்டும் போது பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். 

பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, பேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது.

இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக் கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. 

அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப் பட்டுள்ளது. குறிப்பாக தொடர் பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசார மயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது. 

செயற்கை யாகத் தயாரிக்கப் பட்ட இரசாயன அமிலங்களே இம்மென் பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவை யூட்டிகளாக சேர்க்கப் படுகின்றன.

இனிப்புச் சுவையை நிலைப் படுத்து வதிலும் இந்த அமிலங்கள் பயன் படுகின்றன. 
பெப்சி, கோககோலாவில் நச்சு பொருள் கலந்துள்ளது?
பொதுவாக மென் பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள் கூட சேர்க்கப் படுகின்றன.

இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக் கூடிய தன்மை வாய்ந்தவை. 

இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக் கூடிய தன்மையைக் கொண்டி ருக்கின்றன.

மென் பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்த வுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இது தான்) மென பானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம்

கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறு வதில்லை. எலும்பு களிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய் விடுகிறது.

கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய் விடுகின்றன. மென் பானங்கள் எல்லா வற்றிலுமே சர்க்கரை சேர்க்கப் படுகின்றன.

உதாரணத் துக்கு 325 மில்லி லிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்க ப்படுகிறது. 

உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்தி ருக்கிறது.

ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென் பானங்களோடு சேர்ந்து வரும்

சர்க்கரையின் அளவையும் கணக் கிட்டால் நிர்ணயித்த அளவை விட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும். 
பெப்சி, கோககோலாவில் நச்சு பொருள் கலந்துள்ளது?
சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை வெள்ளை நச்சு என்று வர்ணித்து இருக்கிறார். 

சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்ற வற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப் பட்டுள்ளது. 

இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங் களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை களும் தம்பங்குக்கு தொல்லை களைத் தருகின்றன.

குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர் பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன் படுத்தப் படுகின்றன. 

மிகப் பரவலாக பயன் படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையை விட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்ட தாகும்.

இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்று போக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

வாஷிங்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகளை கொண்டிருப் பதாகக் குறிப்பிடுகிறார். 

காபி, தேநீர் போன்றவற்றில் கா·பின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப் பதற்காக கா·பின் பயன் படுத்துவது அதிகம். 
பெப்சி, கோககோலாவில் நச்சு பொருள் கலந்துள்ளது?
இது வெளியில் தெரியாத விஷயம். காபின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டி விடுகிறது. 

அதிகமான காபின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற வற்றுக்கு வழிகோலி விடுகிறது. 

மென் பானங்களில் சேர்க்கப் பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப் படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்று நோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. 

தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்ற வற்றை ஏற்படுத்து வதோடு புற்று நோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப் பட்டிருக்கிறது. 

கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்று நோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்கா விலும் கனடாவிலும் தடை செய்யப் பட்டிருக்கிறது. 

சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்ற வற்றுடன்

சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர் பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவன ங்களில் விற்பதற்கு தடை செய்தி ருக்கிறது. 

சமீபத்தில் கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. 

ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல.

இவ்வளவு ஆபத்து களையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென் பானங்களை இவ்வளவு நாள் அனுமதித் திருப்பது மோசமானது. 
பெப்சி, கோககோலாவில் நச்சு பொருள் கலந்துள்ளது?
இந்த மென் பானங்கள் மீது தடை விதித்தல் என்பதை பகிரங்க விவாதப் பொருளாக்க வேண்டும்.

இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவு பூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப் பட வேண்டும். 

மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென் பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன் வர வேண்டும்.
Tags: