ஆன்டாசிட் (Antacid) என்னும் உயிரைக் கொல்லும் அரக்கன் !

0

எலும்பு தன்னாலே உடைதல், கிட்னி பெய்லியர் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிற ஆன்டாசிட் என்கிற அரக்கன். சாப்பிட்ட உணவை எளிதாக செரிக்க வெற்றிலை பாக்கு உதவியது அந்த காலம்.

ஆன்டாசிட் என்னும் உயிரைக் கொல்லும் அரக்கன்
கொஞ்சம் வயிறு வலி, வயிறு உப்புசம் வந்தாலோ தொலைக்காட்சி விளம்பரம் பார்த்து விட்டு Pifizer கம்பெனியின் Gelusil MPS, Abbolt கம்பெனியின் Digene, 

GSK கம்பெனியின் Eno போன்ற மாத்திரைகளும் மருந்துகளும் தாராளமாக உணவோடு சாப்பிடும் விருந்தாக மாறி விட்டது இந்த காலம் .

ஆண்டாசிட் Digene (Mg 185mg Al 830mg), Gelusil (Mg 250mg Al 250mg) போன்ற மருந்துகளில் அதிக அமிலத் தன்மையை நடுநிலையாக்கும் அலுமினியம், மெக்னீசியம் கால்சியம் போன்ற காரத் தன்மையுடைய உலோகங்களே உள்ளன. 

இப்போது, ‘ஒரே வேளை’ மருந்தில் அமிலம் சுரக்கும் சுரப்பிகளை நிறுத்தும் Proton pump inhibitors (PPIs) மருந்துகள் இருப்பதால், 

ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்னும் பின்னும் அமிலத் தன்மையை குறைந்து வயிற்றில் உள்ள அமிலம் நீர்த்து போய் விடுகிறது .

பர்சில் பாக்கெட்டில் எப்போதுமே ஸ்டாக் வைத்துள்ளவர்கள் நம்மில் பலர் இந்த மிட்டாய் மாத்திரை, கேஸ் மாத்திரை, சப்பி சாபிடற மாத்திரை, பால் மருந்து, ரோஸ் மருந்து என்று 

Abbolt கம்பெனியின் Digene

பல பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த ஆன்டாசிட் மருந்துகள் அலுமினியம் ஹைட்ராக்சைட், மக்னேசியம் ஹைட்ராக்சைட், கால்சியம் ஹைட்ராக்சைட் போன்ற வேதி பொருளை உள்ளடக்கியது.

ஆன்டாசிட் மருந்துகளை இரைப்பை, உணவுக்குழாய் புண்ணைக் குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்துவதை குறைத்துள்ளனர். 

ஏனெனில், இதை ஒரே நாளில் அடிக்கடி அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டி இருப்பது தான். 

உணவுக் குழாயின் பாதிப்புகளை குறைப்பதற்காகவே மருத்துவர்கள் இதைத் தவிர்க்கின்றனர். 

எதுக்களிப்பை ஏற்படுத்தும் (GerdGastroeso phageal Reflux disease) நோயிலிருந்து ஆன்டாசிட் மருந்துகள் விரைவாக குணம் அளித்தாலும் நோயைக் குணப்படுத்துவது இல்லை.

மருத்துவர்கள் இந்த ஆன்டாசிட் (antacid) மருந்துகளை, பட்ட இடத்தில் மரத்துப் போகச் செய்யும் நவீன மருந்துகளாக ஓரிரு வேளை அல்லது 

ஆன்டாசிட் மருந்துகளை உட்கொள்ளுவது சரியல்ல

ஓரிரு நாள் மட்டும் உட்கொள்ளத் தருவதால் Digene, Gelusil, Eno போன்ற மருந்துகளை விளம்பரங்கள் வாயிலாக கூவிக் கூவி விற்கிறார்கள்.

மாரடைப்பு போன்ற உயிர்கொல்லி நோய்க்குக்கூட நடு நெஞ்சுவலி, எரிச்சல், நெஞ்சு கரித்தல் போன்ற அறிகுறிகளே இருக்கும். 

இந்த அறிகுறிகளுக்காக ஆன்டாசிட் மருந்துகளை உட்கொள்ளுவதும் சரியல்ல. உடனடியாக மருத்துவரிடம் பரிசோதிப்பதே நல்லது.

பக்க விளைவுகள்?

1. வயிற்றில் உள்ள அமிலத்தன்மை குறைவதால் வயிறு புரதத்தை செரிக்கும் தன்மையை இழந்து விடும்.

எனவே பல அமினோ ஆசிட் என்னும் புரதத்தின் கடைசி பொருளின் கலவைகள் தன்னில் ஒன்று இணைந்து இல்லாமல் தனி தனியாக விட படுவதால், 

அமினோ ஆசிட்
குடல் இந்த புரதத்தை உறிஞ்சாமல் விட்டு ஆட்டோ இம்யூன் நோய்கள் வரவும் அதே சமயத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்த போகவும் நிறைய வாய்ப்புள்ளது.

எனவே சாதாரண ஜெலுசில், டைஜின் போன்ற ஆண்டாடிசிட்கள் ஆட்டோ இம்யூன் நோய்களான சொரியாசிஸ், 

ருமாடாய்ட் ஆர்த்ரைடீஸ், ஆட்டோ இம்யூன் தைராய்ட், SLE போன்ற பெரிய நோய்களை உருவாக்கவும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் .

2. குடல் உறிஞ்சிகள் வைட்டமின்களை கிரகிக்கும் தன்மை இழந்து B 12 மாத்திரைகளை கிலோ கணக்கில் எடுத்தாலும் இரத்தத்தில் சேர விடாது. ஆக நரம்பு சமந்தமான நோய்கள் உருவாகும்.

3. இருப்பு சத்து கிரகிக்கிம் தன்மையும் மொத்தத்தில் இழந்து போகவும் வாய்ப்புகள் இந்த ஆன்டாசிட் எடுத்தால் அதிகம்.

4. மிக மிக முக்கியமாக இந்த ஆன்டாசிட்களில் உள்ள வேதி பொருள்களால் உடலின் மக்னீசியம் சத்தை கிரகிக்கும் தன்மை இழந்து 

சதைகள் வலு விழந்து போய் விடும் நிலையும் மக்னீசியம் குறைபாட்டால் உடல் கடுமையான சோர்வைப் பெறும்.

5. ஆன்டாசிட்களின் மிக முக்கியமான அதி பயங்கர பக்க விளைவுகள் உடலின் கால்சியம் சத்தை கிரகிக்கும் தன்மை இழந்து, அமைன் (க்ளுகோஸ் அமைன்) என்கிற 

புரதம் இழந்த எலும்பு
குருத்து எலும்பு வளர்க்கும் புரதம் இழந்து எலும்பு அடர்த்தி குறைந்து ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்பு வலு விழக்கும் நோய் ஏற்பட்டு, எலும்பு எளிதில் உடையும் தன்மையும் உண்டாகிறது.

அதனால் கால் மூட்டு தேய்மானம், இடுப்பு எலும்பு தேய்மானம் போன்ற தேய்மான நோய்கள் எளிதாக வந்து விடும்.

6. பசியின்மை, மலச்சிக்கல், சதை பலஹீனம் போன்றவை அலுமினியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும் .

7. மலச்சிக்கல், அதிக வாயிற்று பொருமல், அடிக்கடி சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் உருவாக கால்சியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும்.

8. சோடியம் பை கார்பனேட் கலந்த ஆன்டாசிட்களால் உடலில் உப்பு சத்தும், கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றம், வயிறு உப்புசம் போன்றவையும் உண்டாகும்.

9. அடிக்கடி மலம் கழித்தல், பசியின்மை போன்றவை மக்னீசியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும்.

10. சிறுநீரக கோளாறு மற்றும் இதய கோளாறுகள் உள்ளவர்கள் எந்த ஆண்டாசிட்கள் எடுத்தாலும் மிக மிக ஆபத்து .

11. ஹார்ட் அட்டாக்கும் கூட வயிறு வலி, மேல் ஏப்பம் போன்று தோன்றுவதால் எதையும் பரிசோதிக்காமல் ஆண்டாசிட்களில் அடிமையாய் இருப்பது உயிருக்கு உலை வைத்து விடும்.

12. மெட்டபாலிக் நோய்களுக்கு அடிப்படை இந்த ஆண்டாசிட்களும் ஒரு காரணம்.

13. கல்லீரல் கொழுப்பு நோய்க்கும் இந்த ஆண்டாசிட்கள் பெரிய பங்கு வகிக்கிறது.

வயிற்றுப் போக்கு உபாதை
14. இதிலுள்ள மெக்னீசியம் வயிற்றுப் போக்கு உபாதையை தரலாம். வயிற்று அசைவைக் குறைக்கும். அலுமினியம் உப்போ மலச்சிக்கலை உருவாக்கும்.வயிற்று அசைவைக் கூட்டும். 

ஆன்டாசிட் மருந்துகளை தினசரியோ, அடிக்கடியோ அதிகமாக உட்கொள்ளுவதன் மூலம் பல மருந்துகளின் (இரைப்பையி லிருந்து ரத்தத்தில்) ஊடுருவும் திறன் குறையும்.. 

மற்ற மருந்துகளின் செயல்படும் சக்தி குறையும். அதனால், ஆன்டாசிட் மருந்துகளை வெறும் வயிற்றில் உட்கொண்டு உணவுக்குப்பின் மற்ற மருந்துகளை உட்கொள்ளலாம்.

ஆகவே முடிந்த அளவு இவற்றை தவிர்த்து இயற்கை வழிமுறைகளை பின்பற்றி நல்வாழ்வு பெறலாமே.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)