ஒசாமாவின் கடைசி நிமிடம் நடந்தது என்ன? மனைவி !

அல்- கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தா னில் பதுங்கி யிருந்த போது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது 

ஒசாமாவின் கடைசி நிமிடம் நடந்தது என்ன? மனைவி !
பற்றிய விஷயம் மீண்டும் - மீண்டும் பேசப் பட்டாலும், ஒசாமா வின் இறுதி நிமிடங் களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன?

அந்த இருட் டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன் முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேட னின் நான்காவது மனைவி அமால்.

ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, “த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின்லேடன் 

அபவுட் த லாஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் ஆஃப் 9/11 மாஸ்டர் மைண்ட்ஸ் லைஃப் புத்தகத் திற்காக, அமால் அவர் களிடம் மனம் திறந்து பேசியிரு க்கிறார்.

“சண்டே டைம்ஸ் யூ.கே” -இல் இந்த புத்தக த்தின் ஒரு பகுதி வெளியாகி யுள்ளது.

2011, மே முதல் தேதியன்று இரவு உணவு முடிந்து, பாத்திரங் களும் சுத்தம் செய்யப் பட்டன.

வழக்க மான இரவு நேர தொழுகை க்கு பின் ஒசாமா பின்லேடனும், அமாலும் மேல் மாடியில் இருந்த படுக்கை யறைக்கு சென்று விட்டனர். இரவு 11 மணி இருக்கும், ஒசாமா ஆழ்ந்த நித்திரை யில் இருந்தார்.

ஒசாமாவின் கடைசி நிமிடம் நடந்தது என்ன? மனைவி !
பாகிஸ்தா னின் அபோட்டா பாதில் ஒசாமா பின்லேடன் ரகசிய மாக மறைந்து வாழ்ந்த வீட்டில் திடீரென்று மின்சாரம் தடைபட்டு, வீடு முழுவதும் இருளில் மூழ்கியது.

பாகிஸ்தானில் மின்சாரத் தடை ஏற்படுவது வழக்க மானது என்பதால், யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.

நள்ளிரவு நேரம், அமாலின் மனதில் காரணமே இல்லாமல் ஏதோ கலக்கம் ஏற்பட்டு தூக்கம் கலைந்தது.

ஏதோ சப்தம் கேட்டதாக தோன்றி னாலும், அது பிரம்மை யாக இருக்கும் என்று நினைத்தார், 

ஆனால் சிறிது நேரத்தி லேயே மாடியில் யாரோ ஏறுவது போல தோன்றி யதால் அமாலுக்கு கவலை ஏற்பட்டது. உன்னிப் பாக கவனித்தார்.

மின்சாரம் இல்லாமல், இருள் சூழ்ந்த நள்ளிர வாக இருந் தாலும், யாரோ கடந்து போனது நிழல் போல தெரிந்தது.

சப்தங்கள் அதிக மானது, ஜன்னல் வழியாக காற்று உள்ளே வந்தபோது, அன்னியர்கள் நுழைந்து விட்டார் களோ என்ற அமாலின் சந்தேகம் உறுதி யானது.

இதற்கிடை யில் படுக்கை யில் படுத்தி ருந்த ஒசாமா பின்லேடனும் திடுக் கிட்டு எழுந்து உட்கா ர்ந்தார். அவர் முகத்தில் அச்சம் நிலவியது அப்பட்ட மாக தெரிந்தது.

ஒசாமாவின் கடைசி நிமிடம் நடந்தது என்ன? மனைவி !
கணவர் தன்னை பிடித்துக் கொண்ட தாக கூறும் அமால், “எங்களை யாரோ உற்றுப் பார்ப்பது போலவும், மேலே ஆட்கள் ஓடுவது போலும் உணர் ந்தேன்.

சட்டென்று நாங்கள் இருவரும் அங்கி ருந்து எகிறி குதித்து ஓடினோம். எங்கள் வீட்டின் சுவர்கள் அதிர்ந்தன.

பால்கனியை ஒட்டி யிருந்த கதவின் வழியாக பார்த்தோம், அவர்கள் உள்ளே வந்துக் கொண்டி ருந்தார்கள்.

அமெரிக்கா வின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் வீட்டின் அருகே இருந் ததை பார்த்து விட்டோம்.

சில நிமிடங் களில் மற்றொரு ஹெலிகாப் டரும் வந்து விட்டது. அத்துடன், அமெரிக்க ராணுவ த்தின் சிறப்பு குழுவும் அவர்க ளுடன் 
இணைந்து கொண்டது”, என்று மறக்க முடியாத அந்த இரவை பற்றி அமால் வர்ணிக் கிறார்.

யாரோ தங்களை ஏமாற்றி விட்டதை அவர்கள் உணர்ந்த தாக தோன்றி யதாக, ஒசாமா வின் கடைசி நிமிடங்கள் பற்றிய புத்தகத் திற்காக கொடுத்த பேட்டியில் அமால் சொல் கிறார்.

பல ஆண்டு களாக ரகசிய மாகவும், பாதுகாப் பாகவும் இருந்த அந்த வீடே தங்களுக்கு மரணப் பொறியாக மாறி விட்டது என்கிறார் அமால்.

ஒசாமா பின்லேட னின் நான்கு மனைவி களில் மூன்று பேரும், குழந்தை களும் இரண்டா வது மாடியில் இருந்த படுக்கை யறைக்குள் வந்து விட்டார்கள், 

என்ன செய்வது என்று யாருக்கும் புரிய வில்லை, அனை வரும் தொழுகை செய்தார்கள்.

வழக்கமான தொழுகை க்கும், அன்றைய கனத்த இரவின் தொழுகை க்கும் இருந்த ஒரே வித்தி யாசம், அது ஒசாமா வின் கடைசித் தொழுகை யாக இருந்தது என்பது தான்.

பிறகு குடும்பத் தினரிடம் பேசிய ஒபாமா, ”அவர்கள் கொல்ல விரும்புவது என்னைத் தான் உங்களை அல்ல” என்று சொன்ன துடன், மனைவி களையும், குழந்தை களையும் வீட்டின் கீழ்தளத் திற்கு செல்லு மாறு கூறினார்.
ஒசாமாவின் கடைசி நிமிடம் நடந்தது என்ன? மனைவி !
இருந்த போதிலும், தனது மகன் ஹுசை னுடன் ஒசாமா வின் அருகி லேயே இருக்க அமால் முடிவு செய்தார்.

”ஹெலிகாப்டரின் ஓசை யால் அவருடைய உறக்கம் கலைந்து விட்டது. அமெரிக்கா தன்னை சுற்றி வளைத்து விட்ட்து என்பதை அவர் உணர்ந்து விட்டார்.

வீட்டைச் சுற்றி வளைத் தவர்கள் பால்கனி க்குள் வந்து விட் டார்கள். சப்தங்கள் அதிக மாயின, ஒரு கட்டத் தில் வீடே அதிர தொடங் கியது, 

அதோடு எங்களது மன அதிர்வும் அதற்கு குறைந்த தாக இல்லை” என்கிறார் அமால்.

வானில் நிலவில் லாத அந்த இரவில், மின் சாரமும் இல்லை. எதுவும் தெளி வாகத் தெரிய வில்லை என்றாலும், தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்து விட்டோம்.

ஹெலிகாப்டர் கள் வருகை, ஆட்கள் நடக்கும் சப்தம், வீடு அதிர்வது, எல்லாம் நிலைமை யின் விபரீதத்தை உணர்த் தியது.

அமெரிக்க ராணுவத்தினர் எங்கள் வீட்டிற்குள் வந்து விட்டார் கள். செஹம் மற்றும் காலித் இருவரும் அமெரிக்கர் களை நெருக்க த்தில் பார்த்து விட்டார்கள்”.

தங்கள் இருப்பிட த்தைப் பற்றிய முழுத் தகவல் களையும் யாரோ அமெரிக்கா விற்கு தெரிவித்து விட் டார்கள், இல்லை யென்றால் இது என்றுமே சாத்திய மாகியிருக் காது என்று கூறுகிறார் அமால்.
ஒசாமாவின் கடைசி நிமிடம் நடந்தது என்ன? மனைவி !
”யாரோ எங்களு க்கு துரோகம் இழைத்து விட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்து விட்டது. இப்படி சுற்றி வளைக்கப் படுவோம் என்று எங்களில் யாருமே எதிர் பார்க்க வில்லை”.

ஒசாமா பின்லேடன் காலிதை அழைத்தார். அவன் ஏ.கே-47 துப்பாக் கியை கையில் எடுத்துக் கொண்டான்.

13 வயதே நிரம்பிய காலிதுக்கு துப்பாக் கியை இயக்கத் தெரியாது என்பது அமாலுக்கு தெரியும். குழந்தை கள் அழுதன.

அமால் அவர் களை சமாதானப் படுத்திக் கொண்டி ருந்தார். அமெரிக்கா ராணுவத் தினர் மேல் மாடிக்கு வந்து விட்டனர். அதன் பிறகு அனைத் தும் சில நிமிடங் களில் முடிந்து விட்டது.
Tags:
Privacy and cookie settings