பசுமை தகனம் - புதைக்கவும், எரிக்கவும் முடியாமல் !

இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்று தொட்டு தொடரும் ஒன்று. இப்பிரச்சி னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன் வைக்கப் பட்டுள்ளது.

பசுமை தகனம் - புதைக்கவும், எரிக்கவும் முடியாமல் !
அதாவது காரத் தன்மை யுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்து விடுவது.

தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழி முறை உள்ளது. விரைவில் அந்த தொழில் நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.

பசுமை தகனம்

அறிவியல் ரீதியாக அதற்கு ‘அல்கலைன் ஹைட்ரோலிசிஸ்’ என்று பெயர். ஆனால் சுலபமாகப் புரிந்து கொள்வது என்றால் பசுமை தகனம்.

தீயிலிட்டு தகனம் செய்வதை விட, சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில், மென்மை யான முறையில் இந்த தகனம் நடைபெறும் என்று அதற்கான விளக்கக் குறிப்பு கூறுகிறது.

பொட்டாசியம் ஹைட்ராக்சைட் கொண்ட காரத் தன்மை யுள்ள திரவத்தில் உடல் வைக்கப்படும் போது, எலும்பு களைத் தவிர அனைத்தும் கரைந்து, எலும்புக் கூடு மட்டுமே எஞ்சும்.

சுற்றுச்சூழல் மாசடையும் பிரச்சினை

அமெரிக்கா போன்ற நாடுகளில் உடல் புதைக் கப்படும் போது, அது சவப் பெட்டியில் வைத்தே புதைக்கப் படுகிறது. 

சில சமயம் சவக் குழிகளின் பகுதிகள் சிமெண்ட் கலவை யால் பூசப்படு கின்றன. பல சமயங் களில் சவப் பெட்டிகள் உலோகத் தால் செய்யப் படுகின்றன.

சுற்றுச்சூழல் மாசடையும் பிரச்சினை
அப்படி செய்யும் போது அவை மக்கிப் போவ தில்லை. சரி தகனம் செய்தால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்றால் அதுவும் இல்லை. 

ஏனென்றால் ஒரு உடலை தகனம் செய்யத் தேவைப் படும் வெப்பத்தை வைத்து, 

மிகவும் கடுங்குளிர் நிலவும் அமெரிக்கா வின் மின்னெசோட்டா மாநில த்தில் உள்ள ஒரு வீட்டை, குளிர் காலத்தில் ஒரு வாரத்துக்கு கதகதப் பாக வைத்தி ருக்க முடியும் என்று கணக்கிடப்ப ட்டுள்ளது.

அறிவியல் சிந்தனை கொண்டவ ர்களுக்கு அப்பாற்ப ட்டு, உணர்வு பூர்மாக எவ்வளவு பேர் இரசாயன தகன த்தை விரும்பு வார்கள் எனும் கேள்வியும் இதில் உள்ளது.

முற்போக்கு சிந்தனையும், சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட வர்களும் இந்த எண்ணத் துக்கு ஆதரவு தெரிவித் தாலும், பொருளாதாரம் இடம் கொடுக்குமா?

ரசாயன தகனத்துக் கான கட்டு மானத்தை ஏற்படுத்து வதற்கு 7.5 லட்சம் டாலர்கள் - அதாவது சுமார் ஐந்து கோடி இந்திய ரூபாய் - செலவா கிறது என்று அதை அமைத்து ள்ளவர்கள் கூறுகின்றனர்.

கரைத்து கரையேற்றும் முறை

இதற்கு பயன் படுத்தப் படும் உலோகப் பெட்டி எஃகால் செய்யப் பட்டது. 6 அடி உயரம், 4 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் கொண்ட அந்தப் பெட்டி பாதுகாப்பு பெட்டகம் போலவுள்ள அறையில் பொருத் தப்பட வேண்டும்.

கரைத்து கரையேற்றும் முறை

இரசாயனக் கரைப்புக் காக எடுத்த்துச் செல்ல ப்படும் உடல்

உடல் முழுவதும் கருப்புத் துணியால் மூடப் பட்ட நிலையில் கொண்டு வரப்படும் சடலம், எஃகுத் தகடில் வைத்து மெல்ல அந்த கரைசல் இயந்தி ரத்தினுள் செலுத்தப் படுகிறது.

பின்னர் கணினி உதவி யுடன் உடல் வைக்கப் பட்டுள்ள அந்தத் தகடு நகராத வாறு பூட்டப் படுகிறது.

பசுமை தகனம் - புதைக்கவும், எரிக்கவும் முடியாமல் !

முதல் நிலையில் உடல் இயந்திரத்தினுள் செலுத்தப்படும்

அடுத்த கட்டமாக அந்த உடல் எடை போடப்படும். பிறகு அந்த உடல் மூழ்கும் அளவும், அதற்கு எவ்வளவு தண்ணீரும் பொட்டாசியம் ஹைட்ராக் ஸைடும் சேர்க்கப் பட வேண்டும் என்பதும் நிர்ணயி க்கப்படு கிறது.

மிகவும் காரத் தன்மை வாய்ந்த அந்தக் கரைசல் 152 செண்டி கிரேட் அளவுக்கு சூடாக்கப் படும். ஆனால் அந்த இரசாயன திரவம் கொதி நிலைக்கு உள்ளாவ தில்லை. அழுத்தம் மூல மாகவே உடல் கரைக்கப் படுகிறது.

பசுமை தகனம் - புதைக்கவும், எரிக்கவும் முடியாமல் !

இரண்டாவது நிலை யில் நீருடன் இரசாயனம் கலக்கப் படுகிறது

விரைவாக உருக் குலையும்

புதைக்கப் படும் உடல் என்ன வாகுமோ அதேதான் இந்த முறை யிலும் நடை பெறுகிறது. ஆனால் ஒரே வித்தியாசம் புதைத்தால் உடல் உருக் குலைந்து போவதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம்.

ஆனால் இந்த முறையில் 90 நிமிடங் களிலேயே அது நடந்து முடிந்து விடுகிறது. பின்னர் பல முறை நீரில் அலசப் படும். அதற்கு மீண்டும் அதே அளவு நேரம் பிடிக்கிறது.

மூன்று அல்லது நான்கு மணி நேரங் களுக்கு பிறகு, மூடிய கதவு திறக்கும். உடலுடன் உள்ளே தள்ளப் பட்ட எஃகுத்தகடு வெளியே இழுக்கப் படும்.

பசுமை தகனம் - புதைக்கவும், எரிக்கவும் முடியாமல் !

மூன்றாவது நிலையில்,  இரசாயனக் கலவை சூடாக்கப் படுகிறது

சிதறிய ஈர எலும்பு களும், உடலில் ஏதாவது மருத்துவ உபகர ணங்கள் பொருத்தப் பட்டிருந் தால், அவையும், அந்தத் தகடில் எஞ்சி இருக்கும். ரசாயன திரவத்தில் கரைந்த இதர பகுதிகள் வடித் தெடுக்கப் படும்.

வடித்தெடுக்கப் பட்ட திரவம் சோப்பு வாடை யுடன் இருக்கும். அதில் உப்பும் சர்க்கரை யும் கலந்திரு க்கும். கழிவாக வெளியேறும் திரவம் சோதிக்கப் படுகிறது.

பசுமை தகனம் - புதைக்கவும், எரிக்கவும் முடியாமல் !

நான்கவது நிலை யில், உடலின் தசைப் பகுதிகள் கரைந்து போயிரு க்கும்

வெள்ளை சாம்பல்

மனித மரபணுக்கள் ஏதும் இல்லாத அந்த திரவம் பின்னர், மாசு நீர் சுத்தி கரிக்கப் பயன் படுத்தப் படும் கட்டமைப்பு போன்ற 

ஒன்றின் மூலம் சுத்தம் செய்யப் பட்டு, வடி கட்டப்படு கிறது. எஞ்சி யுள்ளவை நுண்துகள் களாக மாற்றப் படுகின்றன.

வெள்ளை சாம்பல்

கடைசியாக பையில் அள்ளப்படும் சாம்பல்

மரபு ரீதியான தகனத்தின் பின்னர் கிடைக்கும் சாம்பல் போலன்றி, பளிச் சென்று வெண்மை நிறத்தில் மாவு போல் இந்த நுண் துகள்கள் இருக்கும்.

இயந்திரத் திலிருந்து எடுக்கப் பட்ட ஈர எலும்புகள் சுத்தம் செய்யப் பட்டு உலர்ந்த பிறகு அலங்கார மான குடுவை யில் அடைக்கப் பட்டு உறவினர் களிடம் ஒப்படை க்கப்படு கிறது.

இடப்பிரச்சினை

சரி இதனால் என்ன பலன்? முதலாவ தாக இறந் தோரை புதைப் பதற்கான இடுகாடுகள் நிலப் பரப்பில் குறைந்து வருகின்றன. அவற்றை பராமரி க்கும் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக் கின்றன.

ஆகவே இடப் பற்றாக் குறையுடன் பொருளாதார நெருக்க டியும் சேர்ந்து கொள்கிறது.

பசுமை தகனம் - புதைக்கவும், எரிக்கவும் முடியாமல் !

பல இடங்களில் சடலங் களை ஒன்றின் மேல் அல்லது கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது

இதனால் பல நாடுகளில் இடு காடுகள் மறுசுழற்சி செய்யப் படுகின்றன. மேலும் மேலும் ஆழமாகத் தோண்டப் பட்டு, ஒன்றன் கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படு கிறது.

புதைப்ப தில் இப்படி யான பிரச்சினை கள் என்றால், எரிப்ப திலும் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. எரிபொருள் செலவு, அதனால் சுற்றுச் சூழல் மீதான தாக்கம். 

ஒவ்வொரு தகனத் தின் போதும் 320 கிலோகிராம் கரியமில வாயு வெளியேறு கிறது என்று கணக்கிடப் பட்டுள்ளது.

அது மட்டுமன்றி கரியமில வாயுவை விட நச்சுத் தன்மை கொண்ட வாயுக்கள் தகனம் செய்யப்படும் போது வெளியேறு கின்றன. இப்படி யான காற்றை கோடிக் கணக்கான மக்கள் தினமும் சுவாசிக்கும் நிலை ஏற்படு கிறது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், பொருளா தாரம் போன்ற 18 அளவு கோல்களின் படி, மற்ற எவ்வகை யான இறுதிக் கிரியை விட இராசயன தகனமே சிறந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறு கின்றனர்.

செலவு?

இரசாயன தகனத்து க்கான செலவு மற்ற இரு வகைகளு க்கு ஆகும் செலவில் ஒரு சிறுதுளி மட்டுமே எனவும் ஆய்வுகள் கூறு கின்றன.
சடலம் ஒன்றை புதைப்ப தற்கு நிகர செலவு - இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப் படும் போது 4500ம், 

அதை எரிப்பதற்கு 3500ம் ஆகின்றன அதை இரசாயன முறையில் கரைப்பதற்கு 300 ரூபாய் மட்டுமே ஆகும் என்றும் கூறப் படுகிறது.

ஆனால், மரபுகளை அறிவியல் எண்ண ங்கள் மாற்றுமா என்பது மிகப் பெரிய கேள்வி யாக உள்ளது.
Tags:
Privacy and cookie settings