குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம்?





குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம்?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களுக்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் குறைமாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.
குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம்?
பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், 

தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறு நீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதி யாக பின் தங்கிய நிலையில் இருந்தாலும், 

உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தாலும், கர்ப்ப காலங்களில் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டாலும், அதிக வேலை 

மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களாலும் குறைமாதக் குழந்தைகள் பிறக்கின் றன. 

ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போதும் இது போன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. 
ஆயிரம் கிராமிற்கு குறைவாக பிறக்கும் குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க 

இங்குபேட்டர், வென்டிலேட்டர் மற்றும் சர்பக்டென்ட் சிகிச்சைகளைப் பயன்படுத்தி உயிர் பிழைக்க வைக்க முடியும்.
இந்தக் கருவிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் படுபவை. குழந்தை பிறந்த வுடனேயே தாய்ப்பால் அருந்த முழுத் தகுதி அடைகிறது. 

ஒருவேளை சிசேரியன் செய்த தாய்க்கு, தாய் ப்பால் உடனடியாக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். 

நாள் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து முறை தாய்ப்பாலை கொடுப் பதால் மார்பகப் புற்று நோய் வரு வதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பிறந்த குழந்தைகள், பாலை மட்டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்துக் குடிப்பதால் வாந்தி ஏற்படுகிறது. 

அதிக பாலை அருந்துவதாலும், அருந்திய பால் உணவுப் பாதையில் இருந்து மீண்டும் வாய் வழியே திரும்புவதாலும் வாந்தி ஏற்படுகிறது. இதனால் பயப்படத் தேவையில்லை, குழந்தைகளின் எடை குறையாது. 
குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம்?
ஆனால், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் மருத்துவரை அணுகி உணவுப் பாதை அடைப்பு மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மேற் கொள்ள வேண்டும். 

பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிக்கும். சில குழந்தைகள் பால் குடித்தவுடன் மலம் கழிக்கும். 

ஒரு சில குழந்தைகள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிக்கும். இவை அனைத்தும் இயற்கையான செயலே. 

அதே நேரத்தில் தொடர்ச்சியாக 72 மணி நேரம் மலம் கழிக்கவில்லை என்றால், மருத்துவரின் அறிவுரைப்படி தைராய்டு பிரச்னை 

மற்றும் மலக்குடலில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிந்து சிகிச்சை தர வேண்டும். பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் பசு சீம்பால்.. 
பசுவின் சீம்பாலைக் கொண்டு பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்பது ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. 
மெக்ஸி கோவில் தோன்றிய பன்றிக் காய்ச்சல் நோய் இன்று உலகம் முழு வதும் பரவி மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. 

இந்தியாவில் மட்டும் இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 2000-க்கும் அதிகமானோர் பலியாகியு ள்ளனர். 

குஜராத்தில் 50 வருடகாலமாக பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஆனந்த் நகரில் நடந்த ஆய்வில் பசுவின் சீம்பால் மூலம் பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது. 

ஆனந்த் நகர் அமுல் நிறுவனமும், மும்பை யைச் சேர்ந்த பையோமிக்ஸ் நெட்ஒர்க் நிறு வனமும் சீம்பாலை வைத்து ஆய்வு மேற்கொ ண்டது. 

சீம்பாலில் உள்ள கொழுப்புச் சத்தை நீக்கி விட்டு நோய் பாதித்த நபருக்கு அளிப்பதன் மூலம் பன்றிக் காய்ச்சல் குணமாகிறது என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. 
குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம்?
இந்த ஆய்வு குறித்து பையோமிக்ஸ் நிறுவனத் தலைவர் பவன் சர்மா கூறுகையில் கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பாலில் இருந்து, நானோ முறைப்படி கொழுப்பை ஃபில்டர் செய்து எடுத்து விடுகிறோம். 

நானோ பெப்டைடு என்ற இந்தக் கலவைக்கு ‘ராதா – 108’ என பெயரிட்டு இருக்கிறோம். 
இந்த திரவத்தை நோய் பாதித்தவரின் வாயில் ஊற்றும் போது அது இதயத்திற்குச் சென்று உடலில் மற்ற பாகங்களுக்கும் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணுகிறது என்கிறார். 
Tags: