பருவ வயதில் அந்தரங்க பேச்சு அவசியமா? கட்டாயம் படியுங்கள் !

நமிதா 12–ம் வகுப்பு படிக்கும் மாணவி. 16 வயது. இவள் போட்டிப்போட்டு படிக்கிறாள். நிறைய மதிப்பெண் வாங்கிக் கொண்டிருக்கிறாள். இவளை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். 
பருவ வயதில் அந்தரங்க பேச்சு அவசியமா? கட்டாயம் படியுங்கள் !
ஆனால் இவளிடம் கொஞ்சம் கூட மகிழ்ச்சியே இல்லை. தோழிகள் இவளோடு பேசுவதில்லையாம். இவளை தனிமைப் படுத்துகிறார்களாம்.

தோழிகளை பற்றி பேசினாலே அழுகிறாள். அவ்வப்போது பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள். காரணம் கேட்டால் சொல்ல மறுக்கிறாள் என்று, கவலையை தாயார் பகிர்ந்து கொண்டார்.

தென்னாட்டில் பயன்படுத்தும் மருத்துவ பொக்கிஷம் முருங்கை !

தந்தையும், தாயும் அரசு அதிகாரிகள். தாய் சொந்த ஊரில் மகளோடு வசிக்கிறார். தந்தை இன்னொரு ஊரில் வேலை பார்க்கிறார். இவள், அவர்களின் ஒரே மகள்.
நமிதா அமைதியாக இருந்தாள். முகம் இறுகி இருந்தது. தாயாரை அனுப்பி விட்டு அவளோடு பேசினேன்.

எல்லோருக்குமே மனம் விட்டு பேசக்கூடிய அம்மாக்கள் கிடைத்திருக்கி றார்கள். பள்ளிகளிலும் நல்ல தோழிகள் அமைந்திருக்கி றார்கள். 

ஆனால் எனக்கு மட்டும் இரண்டுமே சரியாக அமையவில்லை என்று அவள் வருத்தத்தை வெளிப்படுத்தினாள்.

பெற்றோர் மீது அவளுக்கு நிறைய கோபம் இருந்தது. எங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் நிறைய இருக்கின்றன. ஆனாலும் அப்பாவும், அம்மாவும் போட்டிப் போட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கி றார்கள். 

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இருவரும் வெவ்வேறு ஊர்களில் தான் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கி றார்கள். 

என் அப்பா விருந்தினர் போல வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார். இரண்டு, மூன்று நாட்கள் அவர் எங்களோடு சேர்ந்து இருந்தாலே அது பெரிய விஷயம்.
எல்லா வேலைப்பளுவும் அம்மாவுக்குத் தான். தினமும் அலுவலகம் முடிந்து சோர்ந்து போய் வீட்டிற்கு வருவார். சமைப்பார். சாப்பிடுவோம். 

சிறிது நேரத்தில் தூங்கி விடுவார். என்னோடு பேசவும் அம்மாவுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று குறைபட்டாள்.

தோழிகள் பற்றி பேசத் தொடங்கியதுமே அவள் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. தனது தோழிகள் எல்லோருமே கெட்டவர்கள் என்றாள்.
கெட்டவர்கள் என்றால் எப்படி? என்று கேட்ட போது, அவர்களைப் பற்றி தான் பேச விரும்பாதது போல் முகம் சுளித்தாள். அவளை சகஜமாகப் பேசும் நிலைக்கு கொண்டு வர சிறிது நேரம் பிடித்தது.

என் தோழிகள் எப்போதும் இரண்டே விஷயங்கள் பற்றிதான் பேசுவார்கள். அவை இரண்டுமே எனக்கு பிடிக்காத விஷயங்கள் என்றாள்.

11–ம் வகுப்பில் இவளது வகுப்பு தோழிகள் பலர் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் ஒன்றாக அமர்ந்து காதல் மற்றும் செக்ஸ் பற்றி பேசிக் கொண்டிருப்பார்களாம். 

எனக்கு கேட்கவே கூச்சமாக இருக்கும். அந்த அளவுக்கு அந்தரங்கமாக பேசுவார்கள். இரண்டு மூன்று தோழிகள் தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்பது போல் செக்ஸ் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். 

மற்றவர்கள் எல்லாம் ‘ஆ’வென்று வாயை பிளந்தபடி கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்றாள். தோழிகள் காதல், செக்ஸ் பற்றி பேசுவது நமிதாவுக்கு பிடிக்கவில்லை. 

ஆர்வமற்றவள் போல் இருந்து விட்டதாலும், சில நேரங்களில் ‘அசிங்கமாக இருக்கிறது! 

உங்களுக்கு பேசுவதற்கு வேறு விஷயமே கிடைக்க வில்லையா? என்று தட்டிக் கேட்டதாலும், ஒரு கட்டத்தில் தோழிகள் இவளிடம் இருந்து விலகி இருக் கிறார்கள். 
பின்பு இவளை தங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் ஒதுக்கி இருக்கிறார்கள். அவ்வப்போது ‘ஒன்றும் தெரியாத பாப்பா..’ என்று கிண்டலும் செய்திருக்கிறார்கள்.

ருசியான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி?

தோழிகள் தனிமைப் படுத்தியதும், கிண்டல் செய்ததும் நமிதாவை ரொம்ப பாதித்து மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

பின்பு வேறு வழியில்லாமல் இவளாகவே அவர்களோடு ஒட்டி உறவாட முன் வந்திருக்கிறாள். ஆனாலும் அவர்கள் இவளை இணைத்துக் கொள்ளவில்லை. 

அந்த தோழிகளில் பெரும்பாலானவர்கள் 12–ம் வகுப்பிலும் இவளோடு சேர்ந்து படிக்க வேண்டியவர்கள். 

அவர்கள் இனி தொடங்க இருக்கும் வகுப்பிலும் தன்னை தனிமைப் படுத்தி விடுவார்களோ என்ற கவலையில் தான் அவள், பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறாள்.

டீன் ஏஜில் காதல், செக்ஸ் பற்றி பேசுவதெல்லாம் பெரிய விஷயமா? இதனை இத்தனை சீரியஸ் ஆக்கி இருக்கிறாயே! என்று கேட்டு நான் சிரித்ததும், அவள் ஆச்சரியமாக பார்த்தாள்.

வயதுக்கு வந்த பின்பு உன்னைப் போன்ற டீன் ஏஜ் பெண்கள் பருவத்தின் அடுத்த படிகளில் அடியெடுத்து வைப்பீர்கள். அது புதுமை, மாற்றம், ரகசியம் நிறைந்ததாக இருக்கும்.
அதைப் பற்றி பேசுவது, சிந்திப்பது, கனவு காண்பது எல்லாம் உடலுக்கும் மனதுக்கும் கிளர்ச்சி தரும் விஷயம். அதனால் பருவ வயதில் எல்லோருக்குமே அதில் ஒருவித ஈடுபாடு இருக்கத் தான் செய்யும். 

இன்றைய தாய்மார்கள் எல்லோரும் கடந்த காலங்களில் இது போன்ற கட்டங்களையும், ரசனைகளையும், பேச்சுக்களையும் அனுபவித்து விட்டுத் தான் வந்திருக்கிறார்கள்.

அதனால் இதுவும் உங்கள் வளர்ச்சியில் ஒரு கட்டம் தான். அதை தவறாக நினைத்து தோழிகளிடமிருந்து ஒதுங்கக் கூடாது. 

அளவோடு பேசிக் கொள்ளலாம். குறிப்பிட்ட காலம் வரை இப்படி பேசுவீர்கள். பின்பு அடுத்த கட்டத்தை நோக்கி போய் விடுவீர்கள்! 

அப்போது இந்த பேச்செல்லாம் ஒன்றும் இல்லாத விஷயமாகி விடும்’ என்றேன்.
பருவ வயதில் அந்தரங்க பேச்சு அவசியமா? கட்டாயம் படியுங்கள் !
காதலையும், செக்ஸையும் ஆர்வமாகப் பேசும் அந்த 16 வயது தோழிகளோடு எப்படி பழக வேண்டும்? எந்த அளவுக்கு நட்பை வைத்துக் கொள்ள வேண்டும்? 

என்பதை எல்லாம் அவளுக்கு விளக்கினேன். புரிந்து கொண்டாள். மகளிடம் தினமும் மனம் விட்டுப் பேச தாய்க்கும் அறிவுறுத்தப் பட்டது.

மருத்துவ குணம்மிக்க பூண்டு மிளகு பால் செய்வது எப்படி?

நமிதா போன்ற டீன் ஏஜ் பெண்களிடம் தாய்மார்கள் தோழிகள் போல் பழக வேண்டும். அப்படி பழகினால் அவர்களது இளம் வயது உணர்வுகளுக்கும், 

சிந்தனைகளுக்கும் தேவைப்படும் போது விளக்கம் கொடுத்து விடலாம். அதன் மூலம் அவர்கள் தேவையற்ற பிரச்சினைகளுக்கும், மன அழுத்தங்களுக்கும் உள்ளாவதை தவிர்க்கலாம். 

படித்து விட்டு கட்டாயம் சேர் செய்யுங்கள்.
Tags: